close
Choose your channels

யார் உண்மையான பச்சோந்தி? வெளிச்சம் போட்டு காட்டிய கமல்? 

Saturday, September 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களாகிய 16 பேர்களில் ஒருவரை பற்றி ஒருவர் பின்னால் பேசாமல் இருந்ததாக வரலாறே இல்லை. வெளியில் என்ன நடக்கின்றது என்பது அவர்களுக்கு தெரியாததால் உள்ளே இருப்பவர்களை பற்றி மட்டுமே அவர்களால் பேச முடியும். இது மூன்று சீசன்களிலும் தொடர்ந்து வரும் ஒரு வழக்கமான நிலையே. ஆனால் லாஸ்லியா மட்டுமே மற்றவர்களை பின்னால் இருந்து பேசியதாக கூறிய சாக்‌ஷி நேற்று அவருக்கு பச்சோந்தி விருதினை கொடுத்தார். இதனால் லாஸ்லியா கடுப்பாகி சாக்‌ஷியுடன் விவாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் சாக்சிதான் உண்மையான பச்சோந்தி என்பதை வெளிச்சம் போட்டு காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ’நீங்க ஏன் உள்ளே போய் ‘வெளியில இருந்து பார்க்குறதுக்கு கியூட் ஆக இருக்குதுன்னு சொன்னீங்க’ என்று சாக்சியை பார்த்து கமல் கேட்கின்றார். அதற்கு சாக்‌ஷி, ‘ஆமாம் நான் ரெண்டு பேரையும் பார்க்க கியூட்டாக இருக்கின்றார்கள் என்றுதான் கூறினேன் என்று கூறினார். அதற்கு கமல், ‘ஆனால் ஷெரின்கிட்ட என்ன சொன்னிஙக’ என்று கேட்டுவிட்டு அதன் பின்னர் ஷெரினிடம் சாக்‌ஷி எப்படிப்பட்டவர் என்பதையும் விளக்க, ஷெரினுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இதன்மூலம் சாக்சி தான் உண்மையான பச்சோந்தி என்பதை கமல் வெளிச்சம் போட்டு காட்டியதாக கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் இன்று சாக்சி பச்சை நிற உடையை அணிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இன்று சாக்சி உள்பட மூன்று சிறப்பு விருந்தினர்களும் வெளியேறி உள்ளார்கள் என்பதும் புரமோவில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.