close
Choose your channels

லாஸ்லியா பதிலை கலாய்த்த கமல்

Sunday, September 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முகின் நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற நிலையில் இன்று யாரை தக்க வைப்பது, யார் வெளியேறுவது என்பதை கமல் அறிவிக்கவுள்ளார். இந்த நிலையில் யாரை தக்க வைப்பது என்ற கேள்வியை கமல் போட்டியாளர்களிடம் கேட்கின்றார்.

முதலில் லாஸ்லியா இந்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘சேரன் மற்றும் கவின்’ இருவரை கூறுகிறார். இதை கேட்டதும் கிண்டலடிக்கும் வகையில் கமல், ‘என்னை இங்கே அனுப்பியது யாரை காப்பாற்றுவது என்பதை சொல்லிவிட்டு வாங்கன்னு சொன்னாங்க. ஆனால் நான் தேவையில்லாமல் வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாமல் இவங்க கூட அரட்டை அடிச்சுகிட்டு இருக்கேன். யாரை காப்பாற்ற வேண்டுமோ, அதை சொல்லிவிட்டு ஆக வேண்டிய வேலையை நான் பார்த்திருக்கலாம். புரோக்ராம் டைம் என்று ஒன்று இருக்கின்றது அல்லவா? என்று ஆடியன்ஸ்களை பார்த்து கண்ணடித்து லாஸ்லியாவையும் கலாய்த்தார்.

கமல் இன்று ஃபுல்பார்மில் இருப்பாதால் இன்றைய நிகழ்ச்சி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.