close
Choose your channels

கவின், லாஸ்லியாவை எச்சரித்த கமல், சாண்டிக்கும் கண்டிப்பு!

Sunday, August 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா, சாண்டி ஆகிய மூவரையும் கமலஹாசன் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் நள்ளிரவில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மைக்கை ஆப் செய்து விட்டு இருவரும் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தது நேற்று திரையிடப்பட்ட குறும்படத்தின் மூலம் தெரிய வந்தது. இதனை அடுத்து இது மிகப்பெரிய விதி மீறல் என்றும், இந்த விதி மீறல் தவறை இனி ஒருமுறை செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்றும் கவின், லாஸ்லியா ஆகிய இருவரையும் கமல்ஹாசன் கடுமையாக கண்டித்தார். இதனையடுத்து இருவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டனர்.

பர்சனலாக ஏதாவது பேசிக் கொள்ள வேண்டுமென்றால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றவுடன் பேசிக் கொள்ளலாம் என்றும், இந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் கமலஹாசன் எச்சரிக்கை விடுத்ததை கவின், லாஸ்லியா இருவரும் ஏற்றுக்கொண்டனர்.

இதேபோல் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் ஆசிரியை வேடத்தில் நடித்த கல்லூரியை சாண்டி சத்துணவு ஆயா போல் இருப்பதாக கமெண்ட் அடித்தார். இதற்காக கமலஹாசன் சாண்டியை கண்டித்தார். சத்துணவு ஆயா என்பவர் ஒரு தாய் போன்றவர் என்றும், எல்லா குழந்தைகளையும் தன்னுடைய குழந்தை போல் நினைத்து அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கும் நபர் என்பதால் அவரை ஆயா என்று கூறி இழிவுபடுத்த வேண்டாம் என்றும் சத்துணவு தாயார் என்று கூறுவதே சரியாக இருக்கும் என்று கூறினார். மேலும் காமராஜர், எம்.ஜி.ஆர் கொண்டு வந்த திட்டமான சத்துணவு திட்டத்தால் தான் இன்று பலர் கல்வி பயின்றுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

இதனை அடுத்து இதற்கு விளக்கம் அளித்த தாண்டி தானும் சத்துணவு சாப்பிட்டு வளர்ந்த பையன் தான் என்றும் இதனை தான் யோசிக்காமல் கூறிவிட்டதாகவும் இதற்காகத்தான் வருந்தி மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.