close
Choose your channels

சேரன் வெளியேறியதால் கடுப்பான கஸ்தூரி: 

Monday, September 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஷெரின் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பல ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் நேற்று ஷெரின் முதல் நபராக காப்பாற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பின்னர் கவின் காப்பாற்றப்பட்டு லாஸ்லியா மற்றும் சேரன் உள்ளே அழைக்கப்பட்டு ஒரு நாடகம் நடத்திய பின்னர் சேரன் வெளியேற்றபட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார் எண்ட்ரியாக உள்ளே சென்ற நடிகை கஸ்தூரி இரண்டே வாரங்களில் வெளியே அனுப்பப்பட்ட நிலையில் தற்போது சேரனின் வெளியேற்றம் குறித்து தமது ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையையும் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சியை அவர் விமர்சனம் செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே சேரனுக்கு ஆதரவு கொடுத்து வந்த கஸ்தூரி, பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த இரண்டு நாட்களிலும் சேரனுடன் நல்ல நட்புடன் இருந்தார். எனவே தற்போது சேரன் வெளியேற்றப்பட்டதால் அவர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே அவர் ஒரு சில பேட்டிகளில் ’பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது பார்வையாளர்களின் வாக்குகளினால் அல்ல என்றும் சேனல் மற்றும் பிக்பாஸ் குழுவினர் எடுக்கும் முடிவு தான் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கஸ்தூரியின் இந்த கருத்திற்கு சமூக வலைதளங்களில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.