என்னால ஹேண்டில் பண்ண முடியலை: சாரி சொன்ன கவின்

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக முக்கோண காதலில் சிக்கி தவிக்கும் கவின், லாஸ்லியா, சாக்சி இருவரையும் எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றார். இருவரும் நெருக்கமாக அன்பாக கவினிடம் பழகிய நிலையில் தற்போது இருவருமே கவினை வெறுக்க தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் இன்று அனைவர் முன்னிலையிலும் கவின் மன்னிப்பு கேட்கிறார். நான் எல்லோரிடமும் நட்பாக பழகத்தான் முயற்சி செய்தேன். ஆனால் அது எங்கேங்கோ போய் முடிந்துவிட்டது. என் தப்புதான்னு நான் இப்போ புரிஞ்சுகிட்டேன். இந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத்தில் நான் பழகியிருக்கேன். நேற்றில் இருந்து என்னென்னமோ நடந்துவிட்டது. அதை என்னால் ஹேண்டில் பண்ண முடியவில்லை. எனவே எல்லோரிடமும் சாரி கேட்டுக்கிறேன்' என்று உருக்கமாக கூறினார்.

கவினின் பேச்சை கவனித்து கொண்டே அமைதியாக சோகமாக லாஸ்லியா உட்கார்ந்திருக்க, சாக்சியோ பாத்ரூமில் சென்று கதறி அழுகிறார். நாளை கமல் தோன்றும் நாள் என்பதால் பிக்பாஸின் 'காதல் திரைக்கதை' இன்றுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் மீராமிதுன் பிரச்சனை, இன்னொரு பக்கம் காதல் பிரச்சனை என நாளை கமல் முன் இரண்டு பஞ்சாயத்துக்கள் எழ வாய்ப்பு உள்ளது