close
Choose your channels

கண்ணீரில் கவின், சீறும் சாண்டி, கம்பி எண்ணும் கஸ்தூரி! என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

Wednesday, August 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடந்த 50 நாட்களாக சின்ன சின்ன சண்டைகளுடன் சென்று கொண்டிருந்தாலும், அவ்வப்போது சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் கஸ்தூரி, வனிதா வருகைக்கு பின் பிக்பாஸ் வீட்டில் ஜாலி என்பதே சுத்தமாக இல்லாமல் முழுக்க முழுக்க சண்டை, கண்ணீர் என மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இன்றைய முதல் இரண்டு புரமோவில் திடீரென மதுமிதா பொங்கியதும், அதற்கு ஆண் போட்டியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இருந்த நிலையில் சற்றுமுன் வெளியான மூன்றாவது வீடியோவில் கவின் கண்ணீர் வடிக்கின்றார். ஒரே ஒரு வார்த்தை பேசியதில் எங்கிருந்து அடிமைத்தனம் வந்தது என எனக்கு புரியவில்லை என கவின் கண்ணீர் வடிக்க அவருக்கு சாண்டி ஆறுதல் கூறுகிறார்.

மதுமிதாவுக்கு அடிபட்டு விடும் என்பதற்காக கேப்டன் டாஸ்க்கில் நாங்கள் விட்டுக்கொடுத்தோம். அப்போதெல்லாம் தெரியாத அடிமைத்தனம் இப்போது எப்படி வந்தது? என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார் சாண்டி. இதனையெல்லாம் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டே அமைதியாக கஸ்தூரி கவனித்து வருகின்றார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் வாரமே ஜெயிலில் அடைக்கப்படும் அளவுக்கு கஸ்தூரி என்ன செய்தார்? என்று தெரியவில்லை. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் பல அதிரடி திருப்பங்களும், கண்ணீர்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.