காதலிகளிடம் சிக்கிய கவின்!

பிக்பாஸ் வீட்டின் முதல் ஒருவாரத்தில் பிளேபாய் போன்று சுற்றிய கவின், தற்போது இரண்டு மூன்று பெண்களிடம் சிக்கி சின்னாபின்னாமாகியுள்ளார். சாக்சி, அபிராமி, லாஸ்லியா ஆகியோர்களிடம் மச்சான் மச்சான் என பழகிவரும் கவின், அவர்களுடன் தன்னுடைய உறவு காதலா? நட்பா? என்பதை தெளிவாக கூறாமல் அவர்களையும் குழப்பி தன்னையும் குழப்பி வருகிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து லாஸ்லியா கறாராக ஒரு கேள்வியை எழுப்புகிறார். ஒருவருடன் பழகும்போது நட்புடன் பழகுகிறாரா? அல்லது காதலுடன் பழகுகிறாரா? என்பதை தயவுசெய்து சொல்லிவிட்டு பழகுங்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி பேசி பழகுவது சரியில்லை' என்று லாஸ்லியா கூற, அதற்கு இது என்னுடைய தவறுதான், இருந்தாலும் காதலா? நட்பா? என வரும்போது நான் நட்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன்' என்று சம்பந்தம் இல்லாத ஒரு பதிலை கூறினார்.

உடனே சாக்சி, 'லாஸ்லியா கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை என்று கூற, அதற்கு பதில் சொல்ல முடியாமல் கவின் எழுந்து செல்கிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் கடலை போட ஆசைப்பட்ட கவின் தற்போது வசமாக சிக்கியுள்ளது தெரிகிறது