கவின் - லாஸ்லியா பேச்சில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

ஆரம்பத்தில் நான்கு பெண்களிடம் சகஜமாக பழகி வந்த கவின், சாக்சி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரிடமும் கொஞ்சம் நெருக்கமாக பழகி வந்தார். இதனிடையே சாக்சி, லாஸ்லியா இருவரில் யாரை காதலியாக தேர்வு செய்வது என்ற குழப்பம் கவினுக்கு இருந்திருக்கலாம். இந்த நிலையில் சாக்சி, கவினை எரிச்சலடையும் வகையில் நடந்து கொள்ள, கவின் மனம் மெல்ல மெல்ல லாஸ்லியா பக்கம் திரும்பியது

லாஸ்லியாவும் முதலில் கவினுடன் நட்புடன் பழகி வந்த நிலையில் தற்போது 'கவினை முன்பு எனக்கு பிடிக்கும், இப்போது ரொம்ப பிடிக்கும் என கூறி தனது காதலை மறைமுகமாக தெரிவித்துள்ளார். சேரனிடமும் இருவரும் தங்களது நிலையை கிட்டத்தட்ட மனம்விட்டு பேசிவிட்டனர்.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் கவினை லாஸ்லியா கொஞ்சம் மரியாதையாக பேசுகிறார். 'உங்களுக்கு' நீங்க' போன்ற வார்த்தைகள் அதிகம் அவரிடம் இருந்து வெளிப்படுகிறது. அதேபோல் கடந்த சில நாட்களாகவே லாஸ்லியாவை கவின் 'மச்சான்' என கூப்பிடுவதை நிறுத்திவிட்டார். இருவரின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இருவரது உறவு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தாண்டி நீடிக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.

More News

விஜய் கொடுத்த தங்கமோதிரத்தை 'பிகில் டிசைனர் என்ன செய்தார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

திருமணத்திற்கு 8 நாள் இருக்கும்போது செல்போனால் பலியான மணப்பெண்

தொழில்நுட்பம் வளர வளர ஆபத்துக்களும் வளர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக சாலையில் நடந்து செல்லும்போதும், வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருக்கும்போதும்

மீண்டும் சாதனை செய்த 'விஸ்வாசம்': அஜித் ரசிகர்களுக்கு நன்றி கூறிய தயாரிப்பு நிறுவனம்

அஜித், நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஏற்கனவே பல சாதனை செய்திருக்கும் நிலையில்

சூர்யாவின் 'காப்பான்' சென்சார் தகவல்

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள 'காப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் சமீபத்தில் முடிவடைந்தது.

பிக்பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் யார்?

பிக்பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் தேர்வுக்கு சேரன், சாண்டி, லாஸ்லியா ஆகிய மூவர் தேர்வு பெற்றுள்ள நிலையில் இதில் ஒருவரை கேப்டனாக தேர்வு செய்யும் டாஸ்க் இன்று நடைபெறுகிறது