close
Choose your channels

கவினுக்காக வாக்குவாதத்தில் லாஸ்லியா-சாக்சி

Wednesday, July 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் காதல் இளவரசனாக கடந்த சில வாரங்களாக வலம் வந்து கொண்டிருந்த கவின் தற்போது பரிதாபமாக தேவதாஸ் போல் உள்ளார். தனக்கும் சாக்சிக்கும் உள்ள உறவு குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை என இன்றைய முதல் புரமோவில் கவின் கூறிவிட்ட நிலையில் கவின் - சாக்சி காதல் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் உள்ள உறவு குறித்து இன்றைய மொட்டை கடிதம் டாஸ்க்கில் கேள்வி எழுகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த லாஸ்லியா, 'தனக்கு கவின் ஒரு நல்ல நண்பர் என்றும், எங்களுக்கு இடையே உள்ள உறவு குறித்து நான் யாரிடமும் சென்று விளக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றும் கூற, இதற்கு சாக்சி கோபமாக குறுக்கிட, இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கின்றது. இதனை பரிதாபமாக வழக்கம்போல் கவின் வேடிக்கை பார்க்கின்றார்.

வனிதா, மீரா வெளியேறிய பின்னர் பிக்பாஸ் வீட்டில் அமைதி திரும்பும் என்று அனைவரும் எண்ணி கொண்டிருக்கையில் பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் சாக்சி மூலம் டுவிஸ்ட் வைத்துள்ளனர். இன்னும் ஒருசில வாரங்களுக்கு சாக்சி, கவினுக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பிரச்சனை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் 100வது நாளில் கூட சண்டை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.