close
Choose your channels

சாக்சி கொடுத்த பச்சோந்தி விருது! தூக்கி எறிந்த லாஸ்லியா

Friday, September 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களிடையே கடுமையான வாக்குவாதமும், போட்டியும் எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையிலான தாக்குதல், மறைமுக தாக்குதல், உணர்ச்சிவசப்பட வைத்தல், கோபப்பட வைத்தல் ஆகிய தந்திரங்கள் போட்டியாளர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒருமணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சியில் 55 நிமிடங்கள் வனிதா மட்டுமே பேசுவதால் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் எரிச்சல் அடைந்து அவர் எப்போது வெளியே செல்வார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் சாக்சி, மோகன் வைத்யா, அபிராமி ஆகியோர் போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கின்றனர். முதல்கட்டமாக பச்சோந்தி விருது அளிக்கப்படுகிறது. பச்சோந்தியை போல் போலியானவர் என்பதால் லாஸ்லியாவுக்கு அந்த விருது வழங்கப்படுவதாக மோகன் வைத்யா அறிவிக்க சாக்சி அந்த விருதினை லாஸ்லியாவுக்கு கொடுக்கின்றார்.

சாக்சியிடம் இருந்து பச்சோந்தி விருதை பெற்ற லாஸ்லியா, ‘இந்த விருது தனக்கு வேண்டாம்’ என்று தூக்கி எறிகிறார். ’உனக்கு இந்த விருது வேண்டாம் என்றால் வெளியே போய் தூக்கி போடு, இங்கே போடக்கூடாது’ என்று மோகன் வைத்யா கூற, ஒரு ஜட்ஜூக்கு மதிப்பில்லை என்றால் நான் யாருக்கும் விருது கொடுக்க மாட்டேன் என்று கோபமாக கிளம்புகிறார் சாக்சி. மொத்தத்தில் இன்றைய டார்கெட் லாஸ்லியா என தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.