close
Choose your channels

சேரனை நாமினேட் செய்த லாஸ்லியா! அப்பா-மகள் பாசப்போராட்டம் என்ன ஆனது?

Monday, August 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே அப்பா மகள் உறவுடன் இருந்து வந்த சேரன், லாஸ்லியா உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து லாஸ்லியா, சேரனை பிரிந்து கவின் குழுவினர்களுடன் இணைந்தார். இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான சேரன் நேற்று கமல் முன் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் தான் லாஸ்லியாவின் தந்தை என்ற நிலையிலிருந்து விடுபட போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் சேரன் லாஸ்லியாவை சமாதானப்படுத்தி நெகிழ்ச்சியுடன் பேசியதும் அதற்கு லாஸ்லியா அழுது கொண்டே அவரது தோளின் மீது சாய்ந்ததையும் பார்க்கும் போது மீண்டும் சேரனும் லாஸ்லியாவும் சமாதானம் ஆகி விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றியது.

ஆனால் இன்றைய நாமினேஷன் நிகழ்ச்சியில் லாஸ்லியா சேரனை நாமினேட் செய்தார். கடந்த வாரம் தன்னை அவர் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதால் அவரை நாமினேட் செய்ததாக லாஸ்லியா கூறினார். ஏற்கனவே தன்னை ஜெயிலுக்கு அனுப்பியதற்கு சேரனும் ஒரு காரணம் என கமல் முன் குற்றம் சாட்டிய லாஸ்லியா இன்று அதனை மறக்காமல் சேரனை நாமினேட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் லாஸ்லியா நாமினேட் செய்யும்போது லாஸ்லியா தன்னை நாமினேட் செய்ய மாட்டார் என்று சேரன் கஸ்தூரியிடம் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேரன் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காகவே லாஸ்லியாவிடம் சமாதான நாடகம் நடத்தியதாகவும் மதுமிதா தலைவரான போது அடைந்த சந்தோஷம், நேற்று லாஸ்லியா காப்பாற்றப்பட்டார் என்று கமல் கூறியபோது சேரன் முகத்தில் இல்லை என்பதையும் சமூக வலைதள பயனாளிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே சேரனின் அப்பா நாடகம் இந்த வாரம் முடிவுக்கு வந்து அவர் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. சமூக பயனாளிகளின் இந்த கருத்து பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.