வனிதா-தர்ஷன் பிரச்சனையின்போது ஒதுங்கி இருந்தது ஏன்? லாஸ்லியா விளக்கம்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை அதிகம் பேச வைத்து பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் கமல்ஹாசன். பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அமைதியாக இருக்கும் லாஸ்லியா, வனிதா-தர்ஷன் பிரச்சனையின்போது கூட அமைதியாக இருந்தது ஏன் என்று கமல்ஹாசன் கேட்டபோது அதற்கு லாஸ்லியா கூறியதாவது:

வனிதா பிரச்சனையில் தர்ஷன் பேசியது அனைத்துமே சரியாக இருந்தது. நான் என்ன பேச வேண்டும் என்று நினைத்தேனோ அதையேதான் தர்ஷன் பேசினார். இதனால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. மேலும் தர்ஷன், வனிதாவிடம் சாரி கேட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவரிடம் கூறினேன், அவரும் அதை ஏற்றுக்கொண்டார் என்று லாஸ்லியா கூறினார். லாஸ்லியாவின் இந்த கருத்துக்கு பார்வையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் சேரன் பிரச்சனையின்போது ஜெயிலுக்கு போக விரும்பியதன் காரணத்தை விளக்கிய லாஸ்லியா, அதன்பின்னர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதை அடுத்து 'மைனா' கதை ஒன்றையும் நெகிழ்ச்சியுடன் கூறினார். சிறுவயதில் தானும் தனது சகோதரியும் மைனா ஒன்றை வளர்த்து வந்ததாகவும், அந்த மைனாவின் மீது தான் மிகுந்த பாசம் வைத்திருந்ததாகவும், ஆனால் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அந்த மைனா இறந்துவிட்டதாகவும், இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வருத்தத்தை தந்ததாகவும் கூறினார். லாஸ்லியா சொன்ன கதையை கேட்டு பார்வையாளர்கள் சிலரின் கண்களில் கண்ணீர் வந்தது.

நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியா இலங்கை தமிழில் பேசியதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. அவரை அதிக நேரம் பேச வைத்த கமல்ஹாசனுக்கு பாராட்டுக்களையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

அரசியல் களத்தில் கமலை விட ரஜினிக்கு ஆதரவு அதிகம்: பிரபல இயக்குனர் பேட்டி

அரசியல் களத்தில் கமல்ஹாசனை விட ரஜினிகாந்துக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என பிரபல இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மீரா-தர்ஷன் புரபோஸ் விவகாரம்: கவின் உதவ கமல் வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவே ஜாலியாகவும் ரசிக்கும்படியாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சியும் கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வனிதா வெளியேறுகிறாரா? பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் முதல் பாகத்தில் ஜூலி, பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா தத்தா, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் மூன்றாம் பாகத்தில் வனிதா ஆகியோர் குறைந்த நாட்களிலேயே

வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு: கமல் முன்னிலையில் வனிதாவை கலாய்த்த சாண்டி

பிக்பாஸ் வீட்டின் சொர்ணாக்காவாக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதாவிடம் எல்லோருக்குமே ஒருவித பயம் உள்ளது. ஏன் பிக்பாஸூக்கே பயம் இருக்கும்போல் தெரிகிறது

சமந்தாவின் 'ஓபேபி' ரீமேக்கில் பிரபல நடிகை!

சமந்தாவின் 'ஓபேபி' திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தாவின் நடிப்புக்கு விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் பெரும்