close
Choose your channels

'அத்த நீ செத்த', நாமினேஷனில் சிக்கும் லாஸ்லியா!

Monday, July 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெறும் ஓப்பன் நாமினேஷனில் ஏற்கனவே லாஸ்லியா, மதுமிதாவையும், சாக்சி கவினையும் நாமினேட் செய்துள்ள தற்போது முதல்முறையாக லாஸ்லியாவும் நாமினேஷனில் சிக்கியுள்ளார். அவரை ஷெரின் நாமினேட் செய்துள்ளார். முதலில் இருந்த லாஸ்லியா தற்போது இல்லை என்றும், இதில் எந்த லாஸ்லியாவை நம்புவது என்று தெரியவில்லை என்றும் ஷெரின் காரணம் தெரிவித்தார்

அதே போல் தர்ஷனும், முகினும் ரேஷ்மாவை நாமினேட் செய்தனர். ரேஷ்மா நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பக்கமும் பேசுவதாக தர்ஷன் கூற, 'அத்த நீ செத்த' என்று முகின் கூறுகின்றார்.

மேலும் சேரனை ரேஷ்மா நாமினேட் செய்கிறார். மற்றவர்கள் மீது காட்ட வேண்டிய கோபத்தை தன்மீது காட்டியதற்காக சேரனை தான் நாமினேட் செய்வதாக ரேஷ்மா காரணம் தெரிவித்தார். வழக்கம்போல் சாண்டியை இந்த வாரமும் யாரும் நாமினேட் செய்யவில்லை என்பது போல் தெரிகிறது. இருப்பினும் இன்றைய நிகழ்ச்சியின் முடிவில்தான் யார் யார் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்

இந்த வாரம் நாமினேசனில் லாஸ்லியா ஒருவேளை சிக்கினாலும், லாஸ்லியா ஆர்மியினர் அவருக்கு ஓட்டு போட்டு காப்பாற்றிவிடுவார்கள் என்றும், அவருக்கு முன்னர் சரவணன், சாக்சி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் நெட்டிசன்கள் இந்த புரமோ வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.