தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்? மதுமிதாவின் அதிரடி பேட்டி

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா டாஸ்க் ஒன்றின்போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதாகவும், அதனையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்று பிக்பாஸ் விதிகளை மீறியதால் வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்கொலை செய்ய முயற்சி செய்ததற்கு காரணம் என்ன? என்பது குறித்து பேட்டி ஒன்றில் மதுமிதா தெரிவித்துள்ளார்.

‘பிக்பாஸ் 2வது சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் இன்னொரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. மூன்றாவது சீசனில் அழைக்கும்போது இந்த முறை வாய்ப்பை இழக்க வேண்டாம் என நினைத்து சம்மதித்துவிட்டேன். பிக்பாஸ் வீட்டில் எனக்கு முதன் முதலில் பிரச்சினை ஏற்பட்டது ஷெரீனுடன் தான்.

நாம் தமிழ் ரசிகர்களுக்காக தான் நிகழ்ச்சி நடத்துகிறோம். ஆனால் ஷெரீன், அபிராமி என யாருமே தமிழ் பேசவில்லை. உடைகளும் நமது கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி அணியவில்லை. இதை தான் நான் கேட்டேன். ஆனால் அதை எனக்கே திருப்பிவிட்டனர். கவின் யாரையும் மதிக்கமாட்டார். பெண்களுடன் மட்டும் தான் சுத்துவார். ஒரு அக்கா மாதிரி இருந்து அவருக்கு புத்திமதி சொன்னேன். ஆனால் அவர் அதை கேட்கவே இல்லை.

எனக்கு குள்ளச்சி என பெயர் வைத்தது கவின் தான். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. சாண்டி விவகாரத்திலும் எனக்கு அது தான் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் சேரன் மட்டும் தான். லாஸ்லியாவை அவர் மகளாக தான் நினைக்கிறார். ஆனால் லாஸ்லியா சேரனை அப்படி பார்க்கவில்லை. முதலில் லாஸ்லியா நன்றாக தான் இருந்தார். ஆனால் கவினுடன் சேர்ந்த பிறகு அவரது மனம் மாறிவிட்டது.

பிக்பாஸ் வீட்டில் ஆண், பெண் பேதம் இருக்கிறது. அங்கு உள்ள ஆண்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடந்த 55 நாட்களாக இதுதான் தொடர்கிறது. அபிராமி சிறைக்கு சென்ற விவகாரத்திலும் இது தான் நடந்தது. அதை நான் தட்டி கேட்டதற்காக தான் என்னிடம் சண்டைக்கு வந்தனர். கடந்த வியாழக்கிழமை தனியார் ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போலிருக்கு. நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயவுசெய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறினேன். இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தினார். இதற்கு நானும் பதில் அளித்தேன். தனியார் ஆப் ஒரு சமூக வலைதளம் தானே. அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன்.

ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் என சொல்ற. தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர். அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக்பாஸ் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்’. இவ்வாறு மதுமிதா தெரிவித்துள்ளார்.

More News

இவங்களுக்கு பயந்து உயிரை விடனுமா? த்ரிஷாவின் 'கர்ஜனை' டிரைலர்!

த்ரிஷா நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படமான 'கர்ஜனை' திரைப்படம் நீண்ட காலதாமதத்திற்கு பின் தற்போது விரைவில் ரிலீஸாகும் நிலையில் உள்ளது.

'ஜித்தன்' ரமேஷின் அடுத்த பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீடு

'ஜித்தன்' படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியான நடிகர் ரமேஷ் அதன்பின் விஜய்யின் 'ஜில்லா' உள்பட ஒருசில படங்களில் நடித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு இவரது நடிப்பில் 'ஜித்தன் 2' திரைப்படமும் வெளியானது.

விஜய் பட நாயகிக்கு எதிராக ஐநாவில் புகார் அளித்த பாகிஸ்தான்!

விஜய் நடித்த 'தமிழன்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா அதன்பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என உலகப்புகழ் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீரில் 370வது சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்தார். 

தல அஜித்துக்கு கிடைத்த மேலும் ஒரு கெளரவம்!

தல அஜித் நடிகராக மட்டுமின்றி கார் ரேஸ், மோட்டார் சைக்கிள் ரேஸ், சமையல், ஆளில்லா விமானம் தயாரிப்பு என பல்வேறு துறைகளில் பெயர் பெற்றவர் என்பது தெரிந்ததே

காஜல் அகர்வால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்!

காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கிய 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானபோது