close
Choose your channels

என் இடுப்பை பிடிச்சு சேரன் இழுத்தார்: மீராமிதுன் போட்ட புதுகுண்டு

Friday, July 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுனுக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காத போட்டியாளர்களில் ஒருவர் சேரன். சேரன் மீது சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது குற்றச்சாட்டை கூறி அவரது இமேஜை உடைத்து, அவருக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் என தெரிகிறது. இந்த நிலையில் 'கிராமம் டாஸ்க் நடந்தபோது சேரன் தனது இடுப்பை பிடித்து இழுத்ததாகவும், அதில் உள்நோக்கம் இருப்பது போல் தான் உணர்ந்ததாகவும், சேரன் சார் அவர்கள் தான் எந்த பெண்ணையும் தொட மாட்டேன் என்று கூறிவிட்டு இவ்வாறு தன்னுடைய இடுப்பை பிடித்து இழுத்தது தனக்கு அதிர்ச்சியை அளித்ததாகவும் அனைவர் முன்னிலையிலும் குற்றச்சாட்டை முன்வைத்தார். மீராமிதுன் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே இதேபோன்ற குற்றச்சாட்டை சக டான்சர் மீது தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கண்ணியமான இயக்குனர், இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனான ஒருவரை, வீட்டில் உள்ள பெண்களை மகள் நினைத்து பழகி வரும் சேரன் மீது, மீராமிதுன் கூறிய குற்றச்சாட்டு அபாண்டமாக இருப்பதாகவே சக போட்டியாளர்கள் கருதினர். சரவணன் இதனை வெளிப்படையாக மீராவிடம் கூறினார். டாஸ்க் விளையாட்டின்போது தற்செயலாக செய்ததை மீரா ஒரு குற்றச்சாட்டாக தெரிவிப்பது தவறு என்றே மதுமிதா உள்பட போட்டியாளர்கள் அனனவரும் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டால் அதிர்ச்சி அடைந்த சேரன், தான் மீராவின் இடுப்பை பிடித்து இழுத்தது உண்மைதான் என்றும், ஆனால் அதில் எந்த தவறான, உள்நோக்கமும் இல்லை என்றும், டாஸ்க் விளையாட்டின் ஒரு பகுதியாகவே அதனை செய்ததாகவும், இது தனது இரண்டு மகள்கள் மீது சத்தியம் என்றும் உருக்கமாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் மீராமிதுன் மீதான வெறுப்பு பார்வையாளர்களிடையே பலமடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.