வெளியே முன்ஜாமின், உள்ளே ஜெயில்: மீராமிதுனின் நிலைமை!

பிக்பாஸ் வீட்டின் ஜெயிலில் அடைக்கப்பட்ட மீராமிதுன், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி பல பெண்களை ஏமாற்றியதாக மீராமிதுன் மீது சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மீராவை விசாரணை செய்ய ஆஜராகுமாறு காவல்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் மீரா, பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் காவல்நிலையத்தில் ஆஜராவார் என அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மீராவுக்கு நீதிமன்றம் முன்ஜாமின் அளித்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடந்த டிக்டாக் டாஸ்க்கில் சரியாக விளையாடாத மீராவை பிக்பாஸ் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அவருடன் சாக்சியும் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வழக்கு ஒன்றின் முன்ஜாமின் பெற்ற மீரா, பிக்பாஸ் வீட்டின் உள்ளே சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவளித்த மற்றொரு அரசியல் தலைவர்

சூர்யா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். எதிர்கால சந்ததியினர் கற்கும் புதிய கல்வி கொள்கை குறித்து கேள்விகளை எழுப்பினார்.

மீராமிதுனை வச்சுசெஞ்ச சாக்சி: உதவிக்கு வந்த ஷெரின்

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன், மிகச்சரியாக ஒவ்வொருவரையும் திட்டமிட்டு அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்க நரித்தனமான வேலைகளை செய்து வருகிறார்.

தமன்னாவின் அடுத்த படத்தின் டைட்டிலில் டாப்சி

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, அஞ்சலி உள்பட பலர் திகில் படங்களில் நடித்து வரும் நிலையில் தமன்னா

கவின் - சாக்சி காதலுக்கு கைகொடுக்கும் லாஸ்லியா!

கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டில் காதல் பஞ்சாயத்து நடந்து வருவது தெரிந்ததே. கவின் சாக்சியை லவ் பண்ணுகிறாரா? அல்லது லாஸ்லியாவை லவ் பண்ணுகிறாரா?

சாஹோ ரிலீஸ் தள்ளி போகிறதா? அஜித் பட விநியோகிஸ்தர்கள் நிம்மதி!

பிரபாஸ் நடித்த பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமான 'சாஹோ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.