பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்? அதிர்ச்சித் தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு மற்றும் வனிதா ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மோகன் வைத்யா, மீராமிதுன், சரவணன், ஷெரின் , அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மீராமிதுன் தொடர்ந்து சக போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் எரிச்சல் படுத்தி வருவதால் இவருக்கு இந்த வாரம் குறைவான ஓட்டுக்கள் பதிவாகியிருப்பதாகவும், இதனையடுத்து இவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வருவதால் நாம் எதிர்பார்க்காத மோகன் வைத்யா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவிருப்பதாக நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

More News

சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த முன்னாள் பாஜக எம்பி

சூர்யா நடித்து முடித்துள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது 'சூரரைப்போற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்டவர்களுக்கு சூர்யாவின் பதிலடி அறிக்கை

கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறாரா ஆல்யா மானஸா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஃபாத்திமா பாபு, வனிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். நாளை ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவுள்ள

எனது கணவர் ஆத்மா சாந்தி அடையாது! சரவணபவன் ராஜகோபால் இறப்பு குறித்து ஜீவஜோதி

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற நிலையில் சிறைக்கு செல்லும் முன்னரே உடல்நலக்குறைவால்

'நேர் கொண்ட பார்வை' படத்தின் புதிய அப்டேட் தந்த போனிகபூர்

அஜித் நடித்து முடித்துள்ள நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாலும்,