close
Choose your channels

மீராமிதுன் இன்னொரு வழக்கு: பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது போலீஸ்

Thursday, July 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமாகிய மீராமிதுன் மீது ஏற்கனவே ரஞ்சிதா என்ற பெண் ரூ 50 ஆயிரம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜராக சமீபத்தில் மீராமிதுனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிப்பதாக மீராமிதுன் தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தற்போது மீராமிதுன் மீது இன்னொரு புகார் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. மீராமிதுன் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி ஜோ மைக்கேல் என்பவரின் லோகோவை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தில் மீராமிதுனிடம் போலீசார் விசாரணை செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த விசாரணையின் முழுவிபரங்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. பிக்பாஸ் வீட்டிற்கே சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.