close
Choose your channels

மீராமிதுனை வச்சுசெஞ்ச சாக்சி: உதவிக்கு வந்த ஷெரின்

Thursday, July 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன், மிகச்சரியாக ஒவ்வொருவரையும் திட்டமிட்டு அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்க நரித்தனமான வேலைகளை செய்து வருகிறார். தன்னுடைய திட்டம் பலிகாத நேரத்தில் உடனே கண்ணீர் நாடகம் நடத்தி அனுதாபம் பெறவும் முயற்சிக்கின்றார்.

அந்த வகையில் மீராமிதுன் கடைசியாக டார்கெட் செய்த நபர் சாக்சி. சாண்டியுடன் இணைந்து செய்த ஒரு டாஸ்க்கில் ஒரு சின்ன விஷயத்தை பெரிதாக்கி, சாண்டி, கவின் மீது தேவையில்லாத பழிகளை போட்டு கடைசியில் சாக்சியையே குறை சொன்னதால், கடுப்பான சாக்சி, 'நீ லூசா? இல்ல, லூசு மாதிரி நடிக்கிறியா? என்று கேட்கும் அளவுக்கு நிலைமை பெரிதாகியது.

இந்த நிலையில் இன்று சிறையில் இருக்கும் சாக்சியுடன் மீண்டும் மீரா மோதுகிறார். தன்னை லூசு என்று சொல்லிவிட்டதாக அவர் குறைகூற, சாக்சியும், 'ஆமாம் நீ லூசு மாதிரிதான் நடந்துகிட்ட, அதனாலதான் அப்படி சொன்னேன் என்று கூற, அப்போது ஷெரின் மீராவிடம் 'நீ ஒவ்வொரு நாளும் ஒருவரை டார்கெட் செய்து அவர்களை கெட்டவராக மாற்றுகிறாய்' என்று இருவரும் மாறி மாறி வறுத்தெடுக்க வேறு வழியின்றி அமைதியாகிறார் மீரா. வனிதாவைவிட பலமடங்கு ஆபத்தான மீராவுக்கு சாக்சி, ஷெரின் இருவரும் சரியான பாடம் புகட்டியதாகவே கருதப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.