close
Choose your channels

இப்படிப்பட்ட சரவணனையா வெளியே அனுப்பினார்கள்? நெட்டிசன்கள் ஆதங்கம்!

Friday, August 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், தனது கல்லூரி காலத்தில் நடந்த ஒரு ஜாலியான சம்பவத்தை கூறியதால் அநியாயமாக வெளியேற்றப்பட்டார். பெண்கள் குறித்து பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சரவணனை தேவையில்லாமல் பிக்பாஸ் குழுவினர் வெளியேற்றியதும், அதனை கமலும் கண்டுகொள்ளாமல் இருந்ததும் பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்தது

சரவணனின் திடீர் வெளியேற்றம் சாண்டி மற்றும் கவின் ஆகிய இருவரையும் ரொம்பவே பாதித்தது. இருவரும் இயல்பு நிலைக்கு திரும்ப ஒருசில நாட்கள் ஆனது. குறிப்பாக சரவணன் வெளியேறிய பின்னர்தான் சாண்டி, கவின் இருவரும் கொஞ்சம் அதிகமாகவே கோபப்படுகின்றனர்.

இந்த நிலையில் கலைமாமணி விருதினை பெற சென்னை வந்த சரவணன், பின்னர் சாண்டி வீட்டிற்கு சென்று அவருடைய மனைவியிடம் நலம் விசாரித்து சாண்டியின் குழந்தைக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சாண்டியின் குழந்தை மற்றும் மனைவியுடன் சரவணன் தனது குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் சாண்டி மீது நட்பை நீட்டித்து வரும் நல்ல உள்ளம் கொண்ட சரவணனையா வெளியே அனுப்பிவிட்டார்கள் என நெட்டிசன்கள் ஆதங்கம் அடைந்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.