close
Choose your channels

எனக்கு இந்த வீட்ல யாரும் வேண்டாம், நான் போறேன்: கதறியழும் ஷெரின்

Thursday, September 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வனிதா பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆனபின்னர் அபிராமி, சாக்சி, மதுமிதா என ஒவ்வொருவரையும் உசுப்பேற்றி மக்களின் கோபத்திற்கு ஆளாக்கி, வெளியேற்றிவிட்டார். ஆனால் சாக்சி உள்பட பெண் போட்டியாளர்களின் வெளியேற்றத்திற்கு கவின் தான் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த நிலையில் வனிதாவின் அடுத்த குறி ஷெரினாக உள்ளது.

தர்ஷனுக்கும் உனக்கும் அப்படி என்ன பழக்கம் தேவையிருக்கு? கேமில் கவனம் செலுத்து என்று இல்லாத ஒரு உறவை வனிதா உருவாக்கி ஷெரினை கோபப்பட வைக்கின்றார். ஆனால் ஷெரின் விஷயத்தில் வனிதாவின் திட்டம் பலிக்கவில்லை. தர்ஷனிடம் ஷெரின் சண்டைக்கு போவார் என்று வனிதா எதிர்பார்த்த நிலையில் திடீரென வனிதா மீது ஷெரின் பாய்ந்தார். தர்ஷனுக்கும் தனக்கும் எந்த உறவும் இல்லை என்றும் அவர் தனக்கு ஜஸ்ட் பிரெண்ட் என்று கூறும் ஷெரின், என்னுடைய ரிலேஷன்ஷிப் குறித்து பேச நீ யார்? என்று ஆவேசமாக கேள்வி கேட்டு வனிதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த நிலையில் தர்ஷனையும் தன்னையும் இணைத்து பேசியதால் மனம் உடைந்து கதறி அழும் ஷெரின் சேரனிடம், ‘எனக்கு இனிமேல் தர்ஷனுடனும் பேச பிடிக்கவில்லை, வனிதாவிடமும் பேச பிடிக்கவில்லை. வேறு யாராவது இதனை கூறியிருந்தால் கூட பரவாயில்லை, எனக்கு தோழியாக இருக்கும் வனிதாவே இதனை கூறியது என் மனதை காய்ப்படுத்திவிட்டது. எனக்கு இந்த வீட்ல யாரும் வேண்டாம், நான் வீட்டுக்கு போறேன்’ என்று கூறுகிறார். சேரனும் தன்னால் முடிந்த அளவுக்கு ஷெரினை ஆறுதல் செய்ய முயன்றாலும் தொடர்ந்து ஷெரின் அழுது கொண்டே இருக்கின்றார். மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் வனிதாவின் சாம்ராஜ்யம் விழத்தொடங்கிவிட்டது என்பதையே காட்டுகிறது. மேலும் சேரனும், ஷெரினும் குறைவான வாக்குகள் வாங்கியுள்ளதால் இன்றைய அனுதாப அலையில் ஷெரினுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.