தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இரு! அபிராமிக்கு வனிதாவின் அறிவுரை

பிக்பாஸ் வீட்டில் வனிதா நேற்று வந்தபின்னர் தான், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தான் எதற்காக இங்கு வந்தோம், ஆனால் என்ன தவறு செய்து கொண்டிருக்கின்றோம் என்பது புரிந்தது. பிக்பாஸ் வீட்டிற்கு காதல் செய்யவும் கட்டிப்பிடித்து நண்பர்களாக வரவில்லை என்றும், போட்டியில் ஜெயித்து வெற்றி பெற வேண்டும் என்பதே ஒரு குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதும் நேற்று வனிதா சொன்ன பிறகுதான் பலருக்கு புரிந்தது.

இந்த நிலையில் ஒவ்வொருவரையும் சரிசெய்ய பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள வனிதா, முதலில் அபிராமிக்கு அறிவுரை கூறுகிறார். பேசிக் குவாலிட்டி இருந்து தில்லான, தைரியமான பையனாக முகின் இருந்தா நீ லவ் பண்றது தப்பே இல்லை. லவ் பண்றது அவனோட, உன்னோட விருப்பம். ஆனால், நீ ஏன் அவன் பின்னாடியே ஓடிக்கிட்டு இருக்க, அவன் ஹீரோ ஆகிட்டான், நீ ஜீரோ ஆகிட்ட. நீ என்னடா என்னை லவ் பண்றது எனக்கு தேவையே இல்லைன்னு தூக்கி போட்டுட்டு போய்கிட்ட இரு. அவனுக்கு வெளியே ஒரு லவ் இருக்கு உனக்கு தெரியுமா? அதைப்பத்தி உனக்கு ஏதாவது சொன்னானா? என்று கேள்விகளால் அபிராமியை துளைத்தெடுக்கின்றார் வனிதா.

வனிதாவின் இந்த அறிவுரைக்கு பின் அபிராமி மாறினால் அவர்தான் முகினின் கடுமையான போட்டியாளராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வனிதாவின் எண்ட்ரிக்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என்றும், இனிமேல் போட்டியாளர்கள் அப்பா, மகள், அண்ணன் , தம்பி என்று பார்க்காமல் வெற்றியை நோக்கி செல்ல வாய்ப்பு இருக்கின்றது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'நேர் கொண்ட பார்வை' படத்தை பார்த்த ரஜினிகாந்த்: தல அஜித்துக்கு பாராட்டு!

தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டு பிள்ளை' செகண்ட்லுக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளிவந்தது.

கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்!

கடந்த ஆண்டு 'நடிகையர் திலகம்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'சீமராஜா', 'சாமி 2',  'சண்டக்கோழி 2', 'சர்கார்' என ஆறு தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிவடையும்

சூர்யா 39' படத்தின் இணைந்த 'விஸ்வாசம்' குழுவினர்

சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள 'சூர்யா 39' திரைப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது

பாடகியாக மாறிய பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறை விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டை சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா என்பது அனைவரும் அறிந்ததே