close
Choose your channels

என்ன ஆச்சு வனிதாவுக்கு? பள்ளி டாஸ்க்கில் திணறல்

Wednesday, August 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடந்து வரும் பள்ளி டாஸ்க் பார்வையாளர்களை கொடுமைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கஸ்தூரியின் டீச்சர் கெட்டப்பும் அவரது செயல்பாடுகளும் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் அதிருப்தியாக உள்ளது. இந்த நிலையில் இன்றும் பள்ளி டாஸ்க் தொடர்கிறது.

இந்த டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி மட்டுமே ஓரளவு சோபித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் பள்ளி மாணவர்கள் ஒரு பாடலை பாடுகின்றனர். தமிழ் சரியாக தெரியாத ஷெரின் 'சேத்துக்குள்ள சின்னப்புள்ள தத்திதத்தி சிக்கிகிச்சு' என்று சரியாக பாடியது ஆச்சரியத்தை அளித்தது. அதேபோல் லாஸ்லியா, 'கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன' என்று கூறி அசத்தினார்.

இந்த நிலையில் வனிதாவின் முறை வரும்போது அவர் எதையும் கூறாமல் அமைதியாக இருந்தார். இதுகுறித்து சேரன் கேள்வி எழுப்ப, அதற்கு வனிதா டென்ஷனாக இருப்பதாக தெரிவித்தார். உண்மையில் டென்ஷன் ஆனாரா? அல்லது டாஸ்க்கிற்காக குழந்தை போல் நடிக்கின்றாரா? என்று தெரியவில்லை. மொத்தத்தில் இந்த பள்ளி டாஸ்க் எப்போது முடியும் என்றே அனைவரும் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.