close
Choose your channels

ஃபைனலுக்கு முன் வெளியேறும் போட்டியாளர் யார்?

Saturday, October 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது முகின், லாஸ்லியா, சாண்டி மற்றும் முகின் ஆகிய நால்வர் இருந்தாலும் இன்று ஒருவர் வெளியேற்றப்பட்டு நாளை மூவர் ஃபைனலுக்கு செல்லவுள்ளனர். எனவே இன்று வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் ஒருசில மணி நேரத்தில் வெளிவந்துவிடும்.

இருப்பினும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் இன்று ஷெரின் வெளியேறவிருப்பதாக தெரிகிறது. இந்த வாரம் பதிவான வாக்குகளில் அடிப்படையில் குறைந்த வாக்குகள் வாங்கிய ஷெரின் வெளியேறவிருப்பதாகவும், முகின், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய மூவரும் ஃபைனலுக்கு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரமே ஷெரின் வெளியேற்றப்படுவார் என்றும் பிக்பாஸ் ஃபைனலில் தர்ஷன் இருப்பார் என்றும் பலரும் கணித்திருந்த நிலையில் தர்ஷன் வெளியேறி ஷெரின் காப்பாற்றபட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.