close
Choose your channels

அழுகும் அபிராமி, சலிப்பில் மோகன், டென்ஷனில் மீரா - சேரன்: வெளியேறுவது யார்?

Sunday, July 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பதை அறிவிப்பது குறித்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் யார் எவிக்சன் ஆகப்போகிறார் என்பதை உடனே சொல்லாமல் கமல் டென்ஷன் ஏற்றுகிறார்.

அபிராமியோ 'தான் வெளியே போகப்போவதாக நினைத்து அழுக', 'நான் இருந்தால் என்ன? போனால் என்ன'? என்று சலிப்புடன் மோகன் வைத்யா கூற, சேரனும், மீராவும் எதுவும் பேசாமல் டென்ஷனாக உள்ளனர். சரவணன் ஒருவர் மட்டுமே கூலாக எதுவாக இருந்தாலும் ஓகே என்ற நிலையில் உள்ளார்.

இந்த நிலையில் இன்று மோகன் வைத்யா வெளியேற போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவர் வெளியேறுவதில் கூட யாருக்கும் வருத்தம் இல்லை. ஆனால் பிரியாவிடையின்போது அனைத்து பெண்களையும் அவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை பார்க்க வேண்டிய கொடுமையும் இருப்பதை நினைத்தே அச்சமாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.