close
Choose your channels

இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

Monday, September 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் நேற்று வனிதா வெளியேற்றப்பட்டதை அடுத்து தற்போது சேரன், கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின், முகின், லாஸ்லியா ஆகிய 7 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்படும் பல்வேறு டாஸ்குகளில் முதலில் வருபவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார் என்று பிக்பாஸ் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து ஏழு பேரும் போட்டி போட்டுக்கொண்டு டாஸ்குகளை செய்து வருகின்றனர். குறிப்பாக சாண்டி, சேரன், தர்ஷன், முகின் ஆகியோர் டாஸ்க்கில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்ர் என தெரிகிறது. எனக்கு இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வேண்டும் என்று சேரன் வெளிப்படையாக கூறியுள்ளதால் அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார் என்பது தெரியவருகிறது. மேலும் கவினை பார்த்து சாண்டி, ‘அவன் கேமை கரெக்டா ஆட ஆரம்பிச்சிட்டான், இனி போட்டி அப்படியே மாறும்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து 80 நாளில் எனக்கு புரியாதது இன்றைக்கு மட்டும் என்ன புரியப் போகிறது? என்று சலிப்புடன் கவின் பேச அதற்கு சேரன் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார். இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை பெறுபவர் யாராக இருக்கும் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.