close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத விருந்தினர்கள்: போட்டியாளர்கள் உற்சாகம்

Tuesday, September 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி என்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நடைபெற உள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 6 பேர் இருக்கும் நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் மீதி இருக்கும் நான்கு பேர் இறுதிப்போட்டிக்கு செல்ல உள்ளனர். ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முகின் தகுதி பெற்று விட்டதால் அவருடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் மூன்று போட்டியாளர்கள் யார் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை உற்சாகப்படுத்த இன்று 2 சிறப்பு விருந்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று உள்ளனர். அவர்கள் கடந்த சீசனில் போட்டியாளர்களாக இருந்த மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆவர். மகத், யாஷிகா ஆகிய இருவரையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். குறிப்பாக இருவரையும் கட்டிப்பிடித்து சாண்டி வரவேற்றார்.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மகத், யாஷிகா ஆகிய இருவரும் சில டிப்ஸ்களையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர். குறிப்பாக டாஸ்குகளை நன்றாக செய்ய வேண்டும் என்று மகத் கூறினார். இந்த பிக் பாஸ் வீடு உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை காத்திருக்க வைத்துக் கொண்டிருக்கின்றது என்று யாஷிகா போட்டியாளர்களுக்கு பிக்பாஸில் பெருமைகளை கூறியுள்ளார். இன்று முழுவதும் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.