close
Choose your channels

பாலா மீது அன்பா? காதலா? நெற்றி பொட்டில் அடித்த ஆரி!

Friday, November 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 4வது சீசனில் உள்ள ஒரே காதல் ஜோடி என பாலாஜி-ஷிவானி இருந்து வரும் நிலையில் இந்த காதல் குறித்து ஒருசில சர்ச்சைக்குரிய விஷயத்தை ஆரி கன்பக்சன் அறையிலும் சக போட்டியாளர்களிடமும் கூறியுள்ளார்.

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ‘கால் செண்டர்’ டாஸ்க்கில் ஆரியிடம் சரியாக சிக்கிய ஷிவானி அவருடைய அடுக்கடுக்கான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் காட்சிகள் இன்றைய இரண்டாம் புரமோவில் உள்ளது

எனக்கு வேற வழியே இல்லாமல் நீங்க தான் கிடைச்சிங்க. இந்த வீட்டில அதிக நேரம் நீங்க யாரோட இருக்கிங்க? காதல் கண்ணை கட்டுதே அப்படின்னு சொன்னது நான் தான். கமல் சார் எபிசோட்ல வெளியில என்ன நடந்துச்சுன்னு கேட்டபோது பாலா உங்க பேரை தைரியமா முன்வந்து சொல்லலை, உண்மையில் வெளியில என்ன நடந்துச்சு? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த ஆரி, கடைசியில் நெற்றிப்போட்டில் வைத்தது போல், ‘பாலா மேல நீங்க வச்சிருக்கிறது அன்பா? காதலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரியின் கேள்விகளுக்கு இந்த புரமோவில் ஷிவானி பதில் சொல்ல திணறுவது போல் தெரிந்தாலும் உண்மையில் ஷிவானியின் பதில் என்ன? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.