பாலா மீது அன்பா? காதலா? நெற்றி பொட்டில் அடித்த ஆரி!

பிக்பாஸ் 4வது சீசனில் உள்ள ஒரே காதல் ஜோடி என பாலாஜி-ஷிவானி இருந்து வரும் நிலையில் இந்த காதல் குறித்து ஒருசில சர்ச்சைக்குரிய விஷயத்தை ஆரி கன்பக்சன் அறையிலும் சக போட்டியாளர்களிடமும் கூறியுள்ளார்.

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ‘கால் செண்டர்’ டாஸ்க்கில் ஆரியிடம் சரியாக சிக்கிய ஷிவானி அவருடைய அடுக்கடுக்கான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் காட்சிகள் இன்றைய இரண்டாம் புரமோவில் உள்ளது

எனக்கு வேற வழியே இல்லாமல் நீங்க தான் கிடைச்சிங்க. இந்த வீட்டில அதிக நேரம் நீங்க யாரோட இருக்கிங்க? காதல் கண்ணை கட்டுதே அப்படின்னு சொன்னது நான் தான். கமல் சார் எபிசோட்ல வெளியில என்ன நடந்துச்சுன்னு கேட்டபோது பாலா உங்க பேரை தைரியமா முன்வந்து சொல்லலை, உண்மையில் வெளியில என்ன நடந்துச்சு? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த ஆரி, கடைசியில் நெற்றிப்போட்டில் வைத்தது போல், ‘பாலா மேல நீங்க வச்சிருக்கிறது அன்பா? காதலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரியின் கேள்விகளுக்கு இந்த புரமோவில் ஷிவானி பதில் சொல்ல திணறுவது போல் தெரிந்தாலும் உண்மையில் ஷிவானியின் பதில் என்ன? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்


 

More News

போலீசார் தாக்கியதால் அவர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து பெண் தற்கொலை…பதற வைக்கும் சம்பவம்!!!

நெல்லை மாவட்டத்தில் தன்னைத் தாக்கிய போலீசார் முன்னிலையிலேயே 45 வயதான பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழந்த பரிதாபம்!!!

துபாய் ஒட்டியுள்ள புறநகர் பாலைவனப் பகுதிகளில் ஆதரவற்று பல ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உயிர் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள்… முதல் இடத்தைப் பிடித்து தமிழகம் சாதனை!!!

அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான விருதுப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்று இருக்கிறது.

ஒன்டே கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார் தமிழக வீரர் டி.நடராஜன்!!!

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாட தமிழகத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

நிஷா இன்னும் கேம் பண்ணவே இல்லை: நிஷா கணவர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெள்ளேந்தியாக இருக்கும் ஒரு போட்டியாளர் என்றால் அது நிஷா மட்டுமே என்பதுதான் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. எதை சொன்னாலும் நம்பிவிடுவது