இந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்: தப்பிய ஐவர் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அந்த நாமினேஷனில் சிக்கியவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வார இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே

அந்தவகையில் நேற்று நான்கு மணி நேரம் ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைபெற்ற போதிலும் அதில் நாமினேஷன் படலமும் நடந்தது. இந்த நாமினேஷனில் மொத்தம் உள்ள 16 போட்டியாளர்களில் 11 போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர் என்பது ஆச்சரியமான ஒன்றாகும். 5 பேர்கள் மட்டுமே நாமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளனர் என்பதும் அதில் கேப்டன் அர்ச்சனாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

நாமினேஷன் சிக்கியவர் 11 பேர்கள்: சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன்.

இந்த வார நாமினேஷனில் சிக்காதவர்கள் அர்ச்சனா, சம்யுக்தா, ஆரி, கேப்ரில்லா, ஷ்வானி

ஆஜித், அனிதா, வேல்முருகன், சனம்ஷெட்டி ஆகிய நால்வரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் 11 பேர் நாமினேஷனில் உள்ளதால் ஓட்டுக்கள் பிரியும் என்பதால் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசமே இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும் இந்த வாரம் பாடகி சுசித்ரா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைய வாய்ப்பு உள்ளதால் பாடகர்களான ஆஜித் அல்லது வேல்முருகன் வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த வாரம் வெளியேறுவது யாராக இருக்கும் என்பதை கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

More News

என்கிட்ட தான் பிரச்சனை இருக்கோ? கன்பஃக்சன் அறையில் கதறி அழும் அனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று மொத்தம் உள்ள 16 போட்டியாளர்களில் 11 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர் என்பது தெரிந்தது

லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு

திருச்சி லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் திடீரென உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகை குஷ்பு கைது!

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ சிதம்பரம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென முட்டுக்காடு அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளது

புருனே நாட்டு இளம் வயது இளவரசர் திடீர் மரணம்!!! உலகத் தலைவர்கள் இரங்கல்!!!

புருனே நாட்டு சுல்தான் ஹசனல் போங்கியாவின் மகனும் அந்நாட்டு இளவரசருமான ஹாஜி அப்துல் அசம்

'டாவின்சி கோட்' போல் தமிழில் ஒரு படம்: பிரபல இயக்குனர் தகவல்

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஹாலிவுட் திரைப்படம் 'தி டாவின்சி கோட்.