அவன் எல்லாம் ஒரு ஆளு: அர்ச்சனாவுக்கு ஒரு குறும்படம் உண்டா கமல் சார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் தொடங்கிய புதிய மனிதா என்ற டாஸ்க்கில் தனது அப்பா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறி தன்னை மனவருத்தம் செய்துவிட்டதாக நிஷா மீது குற்றஞ்சாட்டி அர்ச்சனா பெரிய களேபேரத்தை நடத்தினர். இதனை அடுத்து அன்பு குரூப் உடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென மீண்டும் அர்ச்சனாவும் நிஷாவும் தற்போது இணைந்து கொண்டனர். நிஷா கூறியதை தான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தவறாக எடுத்துக் கொண்டால் தானே மன்னிப்பு என்றும் அர்ச்சனா கூறியது பெரும் ஆச்சரியம். தவறாக எடுத்து கொள்ளாத ஒரு விஷயத்திற்காக அர்ச்சனா ஏன் இவ்வளவு பெரிய ஒரு ஆர்ப்பாட்டம் செய்தார் என்பதுதான் தற்போது பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது.

மேலும் தான் தவறு செய்துவிட்டோம் என்று அழுது கொண்டிருக்கும் நிஷாவிடம், ”அழ வேண்டாம் அதுவும் அந்த ’முறை மவன்’ முன்னாடி அழவேண்டாம், அவன் எல்லாம் ஒரு ஆளு’ என்று அர்ச்சனா சக போட்டியாளர் ஒருவரை ஒருமையில் பேசி இருப்பதும் அநாகரீகத்தின் உச்சகட்டமாகக் கருதப்படுகிறது.

இதேபோல் பேசிய சம்யுக்தாவுக்கு குறும்படம் போட்டு அவருடைய தவறை எடுத்துக் காட்டிய கமல்ஹாசன், தற்போது அர்ச்சனாவுக்கு பாடம் புகட்ட ஒரு குறும்படம் போட வேண்டும் என்று பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பை கமல்ஹாசன் வரும் சனி ஞாயிறு தினங்களில் பூர்த்தி செய்வாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஆர்யாவின் அடுத்த படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் சமீபத்தில் திறக்கப்பட்டன. இருப்பினும் திரையரங்குகளில் பார்வையாளர்கள் கூட்டம்

ஆர்யாவுக்கு கிடைத்த ஆஸ்காருக்கு இணையான பரிசு: வைரலாகும் புகைப்படங்கள்!

ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'சார்பாட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது

தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இதை செய்யுங்கள்: மனோபாலா வேண்டுகோள்

சின்னத்திரை நடிகர்-நடிகைகள் தொடர்ந்து மன அழுத்தம் காரணமாகவும், பணிச்சுமை காரணமாகவும்ம் வாய்ப்பு கிடைக்காத காரணங்களாலும்ம் வறுமை உள்ளிட்ட காரணங்களாலும் அவ்வப்போது தற்கொலை செய்து கொண்டு

ஆரி, அனிதாவை டார்கெட் செய்யும் லவ்பெட் கேங்! நம்புங்கள் குரூப்பிஸமே இல்லை!

அர்ச்சனா தலைமையிலான லவ்பெட் குரூப் தனித்திறமை உடன் விளையாடும் போட்டியாளர்களை வெளியேற்றி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இன்று பிரேத பரிசோதனை; சித்ரா மரணத்தின் மர்மம் விலகுமா?

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று ஓட்டல் அறை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.