close
Choose your channels

'டிப்'புன்னு என் வாயை தான் அடைச்சிட்டாங்களே: ஆஜித் குடும்பத்தினரிடம் புலம்பிய ஆரி!

Thursday, December 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டிற்கு ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் வெளியான அடுத்த புரமோவில் ஆஜித்தின் குடும்பத்தினர் வருகின்றனர்

’ஆராரிராரோ என்ற பாடலின் பின்னணியில் ஆஜித்தின் குடும்பத்தினரின் வருகை ஆஜித்துக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்திருக்கும். ‘இங்கே வந்து இத்தனை நாள் ஆகிவிட்டது, இன்னும் பேசவே மாட்டேன் என்கிறான் என்று ஆஜித்தின் தாயார் புலம்புகிறார். அதன்பின்னர் ஆஜித்தின் சகோதரி பாலாவிடம் ’நீங்கள் நன்றாக பேசுவீர்களே’ என்று கூறும்போது ’நான் பேசவே மாட்டேன், ரொம்ப கொயட்’ என்று கூற ’நீங்களா’ என்று கேலியுடன் சிரிக்கின்றார்

மேலும் ஆஜித் தான் இருப்பதிலேயே வயது குறைந்தவன். ஒவ்வொரு முறையும் ஆஜித் நாமினேட் ஆகும்போது அவனுக்கு ஒரு க்ளியர் பிக்சரா யாருமே சொல்லலையோ என்று தோணுகிறது என்று ஆஜித்தின் சகோதரி கூறும்போது, அதற்கு ஆரி ’என் வாயை தான் எல்லாரும் சேர்ந்து அடைச்சிட்டிங்களே, ஆஜித்திடம் ஒரே ஒருமுறை தான் பேசினேன். அப்போது எல்லாரும் சேர்ந்து ‘டிப்’புன்னு என் வாயை அடைச்சிட்டாங்க’ என்று கூறியவுடன் ‘அதுவும் சரிதான்’ என்று ஆஜித் சகோதரி ஒப்புக்கொண்டார். பின்னர் கடைசி வரைக்கும் அவனுக்கு அது புரியவே இல்லை’ என்று கூறுவதுடன் இன்றைய இரண்டாம் புரமோ முடிவுக்கு வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.