close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் 15 போட்டியாளர்கள்: மாறி மாறி 'சாரி' சொல்லும் ஆரி-ரியோ: 

Tuesday, January 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் நேற்றும் இன்றும் சிறப்பு விருந்தினர்களின் வருகையால் மீண்டும் வீடு நிரம்பி உள்ளதை பார்த்து வருகிறோம்.

நேற்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா வந்திருந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் சம்யுக்தா மற்றும் சுசித்ரா ஆகியோர் வந்திருந்தனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது புரமோவின்படி ஆஜித், சனம்ஷெட்டி, வேல்முருகன் ஆகியோர்களும் வந்திருக்கின்றனர் என்பதால் வீட்டில் மொத்தம் 15 பேர் தற்போது உள்ளனர்.

அனிதா, சுரேஷ் மற்றும் ஷிவானி ஆகிய மூவர் மட்டுமே மிஸ்ஸிங் என்பதும் மூவரும் விரைவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய டாஸ்க் ஒன்றில் ஏற்பட்ட சிறிய மனஸ்தாபம் காரணமாக ஆரி மற்றும் ரியோ ஆகிய இருவரும் மாறி மாறி ’சாரி’ கேட்டுக்கொண்ட காட்சிகளும் உள்ளன. மீண்டும் பிக்பாஸ் வீட்டில் கூட்டம் அதிகமாகி உள்ளதால் பிரச்சினைகளும் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.