இந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்

  • IndiaGlitz, [Wednesday,October 21 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு பிரிவினர் அரக்கர்களாகவும் இன்னொரு பிரிவினர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறி நடத்திய டாஸ்க்கில், புரமோவில் இருந்த விறுவிறுப்பு, சுவாரஸ்யம் நிகழ்ச்சியில் இல்லை என்பதே பார்வையாளர்களின் கருத்துக்களாக உள்ளது

இந்த நிலையில் இன்று மீண்டும் அதே டாஸ்க் தொடர்கிறது. ஆனால் நேற்று அரக்கர்களாக இருந்தவர்கள் இன்று ராஜ வம்சத்தினர்களாகவும், நேற்று ராஜ வம்சத்தில் இருந்தவர்கள் அரக்கர்களாக மாறி உள்ளனர்.

இதனை அடுத்து நேற்று அரக்கர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அரக்கர்களாக மாறியவர்கள் பாலாஜி மற்றும் சுரேஷை குறி வைத்து இம்சைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ஆரி ஆவேசமாகி ‘எல்லோரும் சேர்ந்து பிளான் பண்ணி உடல் அளவில் தொந்தரவு செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக பாலாஜியுடன் அவர் மோதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அதுமட்டுமின்றி, ‘இந்த விளையாட்டை நீங்கள் விளையாட்டுவதற்கு பதில் வேற ஏதாவது செய்யலாம்’ என்று ஆரி கூறியதும் அரக்கர்களாக நடித்துக் கொண்டிருந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவ்வளவு நாளும் அட்வைஸ் மட்டுமே செய்து கொண்டிருந்த ஆரி, இன்று முதல் முறையாக பொங்கியெழுந்து இருப்பதை அடுத்து, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

போதை பொருள் விவகாரம்: பிக்பாஸ் போட்டியாளர் உள்பட 2 நடிகைகள் கைது!

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சில நடிகைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சின்னத்திரை நடிகை ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும்

எலிசபெத்திடம் வருத்தம் தெரிவித்த வனிதா: வைரலாகும் வீடியோ

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவருடன் வனிதாவிஜயகுமாருக்கு திருமணம் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்,

நடிகர் கார்த்திக்கு 2வது குழந்தை: குவியும் வாழ்த்துக்கள் 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி கடந்த 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு உமையாள் என்ற குழந்தை உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!!!

சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விதிமுறைகளை மீறி தங்கம் கடுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்!!!

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அவர்களின் நுரையீரல் மட்டுமல்லாது பல உடல் உறுப்புகளும் மோசமாகப் பாதிக்கப் படுவதை மருத்துவர்கள் உறுதி செய்து இருந்தனர்.