close
Choose your channels

இந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்

Wednesday, October 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு பிரிவினர் அரக்கர்களாகவும் இன்னொரு பிரிவினர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறி நடத்திய டாஸ்க்கில், புரமோவில் இருந்த விறுவிறுப்பு, சுவாரஸ்யம் நிகழ்ச்சியில் இல்லை என்பதே பார்வையாளர்களின் கருத்துக்களாக உள்ளது

இந்த நிலையில் இன்று மீண்டும் அதே டாஸ்க் தொடர்கிறது. ஆனால் நேற்று அரக்கர்களாக இருந்தவர்கள் இன்று ராஜ வம்சத்தினர்களாகவும், நேற்று ராஜ வம்சத்தில் இருந்தவர்கள் அரக்கர்களாக மாறி உள்ளனர்.

இதனை அடுத்து நேற்று அரக்கர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அரக்கர்களாக மாறியவர்கள் பாலாஜி மற்றும் சுரேஷை குறி வைத்து இம்சைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ஆரி ஆவேசமாகி ‘எல்லோரும் சேர்ந்து பிளான் பண்ணி உடல் அளவில் தொந்தரவு செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக பாலாஜியுடன் அவர் மோதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அதுமட்டுமின்றி, ‘இந்த விளையாட்டை நீங்கள் விளையாட்டுவதற்கு பதில் வேற ஏதாவது செய்யலாம்’ என்று ஆரி கூறியதும் அரக்கர்களாக நடித்துக் கொண்டிருந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவ்வளவு நாளும் அட்வைஸ் மட்டுமே செய்து கொண்டிருந்த ஆரி, இன்று முதல் முறையாக பொங்கியெழுந்து இருப்பதை அடுத்து, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.