close
Choose your channels

ஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி!

Friday, December 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நேற்று கால் சென்டர் டாஸ்க்கில் நன்றாக விளையாடியவர்களை வரிசைப்படுத்துதல் நிகழ்வில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது. தனக்கு இரண்டாவது இடம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அனிதா எந்த இடத்திலும் நிற்க முடியாது என்று கூறியதை அடுத்து பத்தாம் இடம் காலியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்வு குறித்து இன்று ஆரி, அனிதா மற்றும் பாலாஜி விவாதிக்கின்றனர். பாலாஜி கூறியபோது சனம் ஷெட்டிக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் ஒரே ஒரு விஷயம், ஒரு கால் வந்தது என்பதற்காக இரண்டு கால் வந்தவர்கள் என்ன தப்பு செய்தார்கள் என்று ஆரியை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அப்போது அனிதா ’நான் வந்து தோல்வி அடைந்தவர் என்றே வைத்துக்கொள்வோம். சனம்ஷெட்டிக்கு நீங்கள் ஏன் ஆதரவு கொடுத்தீர்கள்' என்று கேட்கிறார். அதற்கு ஆரி, 'சனம் சரியாகத்தான் விளையாடினார் என்பதால் ஆதரவு கொடுத்தேன்’ என்று கூறினார். மேலும் சரியான ஒரு நபருக்கு ஆதரவு கொடுக்கவில்லை எப்படி? என்று கேட்க அதற்கு ’நீங்கள் கைதூக்கியது தவறு' என்று அனிதா கூற, அதற்கு ஆரி, ’அது உங்கள் பார்வை' என்று கூறுகிறார்.

இறுதியில் பாலாஜி ’ஒரு பக்கத்தில் உள்ள நியாயத்தை பேசிவிட்டு இன்னொரு பக்கத்தில் உள்ள நியாயத்தை பேசாமல் விட்டுவிட்டீர்களே’ என்று கூற அதற்கு பதில் சொல்ல ஆரி முடியாமல் திணறுகிறார். மொத்தத்தில் அனிதா மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் ஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் காட்சியோடு இன்றைய முதல் புரமோ முடிகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.