என்கிட்ட தான் பிரச்சனை இருக்கோ? கன்பஃக்சன் அறையில் கதறி அழும் அனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று மொத்தம் உள்ள 16 போட்டியாளர்களில் 11 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர் என்பது தெரிந்தது

இந்த நிலையில் நாமினேஷன் செய்யப்பட்ட பதினோரு போட்டியாளர்களில் ஒருவர் அனிதா. ஏற்கனவே கடந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டபோது புலம்பி தள்ளிய அனிதா, இந்த முறை பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்பஃக்சன் அறையில் கதறி அழும் காட்சி முதல் புரமோவில் உள்ளது

‘நான் எப்போதும் தனிமையாக இருப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு இருக்கிறது என்றும், நான் பொதுவாக மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு கேரக்டர், ஆனால் என்னுடைய சைடிலிருந்து பிரச்சனை வரக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கின்றேன் என்றும் அழுதபடி கூறினார்.

மேலும் ’எனக்கு பிடித்தவர்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்வதா அல்லது என் மனதில் தோன்றுவதை செயல்படுத்துவதா? என்ற ஒரு போராட்டம் என் மனதளவில் உள்ளது என்றும் ஒருவேளை என்னிடம் தான் நிறைய குறைகள் இருக்கின்றதோ என்று கூறி கன்பஃக்சன் அறையில் அனிதா கதறி அழுகிறார்

கடந்த வாரம் கன்பஃக்சன் அறையில் அழுது அனுதாப வாக்குகளை சுரேஷ் பெற்றிருப்பார் என்ற எண்ணத்தில் தனக்கும் அனுதாப வாக்குகள் கிடைப்பதற்காக அனிதா அழுகிறாரா? அல்லது உண்மையிலேயே மனம் வருந்தி அழுகிறாரா என்பதை பிக்பாஸ் மட்டுமே அறிவார்