close
Choose your channels

எனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்

Sunday, October 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய அனிதாசம்பத், டைட்டில் பட்டம் வெல்வாரா இல்லையோ கண்டிப்பாக கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளர் என்பதால் இன்னும் ஒரு சில வாரங்களில் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த வாரம் நாமினேஷனில் அனிதா பெயர் இருந்தாலும் கண்டிப்பாக அவர் இந்த வாரம் தப்பித்து விடுவார் என்பதும் அவர் பேசுவதை மட்டும் கொஞ்சம் குறைத்து கொண்டால், கண்டிப்பாக இறுதிப்போட்டி வரை நெருங்கி விடுவார் என்றும் பார்வையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா குறித்து ஏற்கனவே அவரது கணவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார் என்றும், அதில் நடன இயக்குனர் சதீஷ் குமாருடன் ஒரு சிறிய மோதலில் ஈடுபட்டு இருந்தார் என்றும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அனிதாவின் கணவர் பதிவு செய்திருக்கும் இன்னொரு சமூக வலைதளப் பதிவில், ‘அனிதாவை பிரிந்து இன்றுடன் 30 நாட்கள் ஆகிவிட்டது என்றும், இது எனக்கே ரொம்பப் புதுசா இருக்கு என்று ஒரு பதிவு செய்துள்ளார். லவ் பண்ற டைம்ல இருந்து இப்ப வரைக்கும் இவ்வளவு நாள் நாங்க பார்த்துக்காம இருந்ததில்லை என்றும் இதுதான் பர்ஸ்ட் டைம் என்றும் எனக்கே ரொம்ப புதுசா இருக்கும் என்றும் நான் என் செல்லத்தை மிகவும் மிஸ் செய்கிறேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.