close
Choose your channels

எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்

Tuesday, October 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் படலம் முடிந்தவுடன் ஆரி மற்றும் சோம்சேகர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் இடையில் நின்று கொண்டிருந்த அனிதா பொங்கி எழுந்தார்

என்னுடைய பேச்சை யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள், நான் எப்பொழுது பேச வந்தாலும் கொஞ்சம் இரு என்று என்னை அடக்கி விடுகிறார்கள். நான் ஒன்றும் சின்ன குழந்தை இல்லை. எனக்கு கல்யாணம் ஆகி விட்டது, நான் பெரிய பொம்பள, என்னைவிட சின்ன பையனாக இருக்கும் பாலாஜி சொல்வதையெல்லாம் கேட்கிறீர்கள். ஆனால் நான் சொல்வதை யாருமே கேட்க மாட்டேன் என்கிறீர்கள். என்னுடைய திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கொடுக்காததால் தான் நான் இந்த வாரம் நாமினேஷன் இடம் பெற்றுள்ளேன். ஒருவேளை என்னுடைய கருத்து கேட்கப்பட்டு இருந்தால் நான் நாமினேஷனில் இருந்திருக்க மாட்டேன்

நான் செய்தி வாசிப்பாளர். உலக அரசியல் எனக்கு தெரியும். என்னுடைய வீட்டில் நான் தான் எல்லா முடிவுகளையும் எடுப்பேன், என்னை பேச விடாமல் செய்வது முறையல்ல என்று அனிதா பொங்கி எழுந்தார். இடையிடையே கண்ணீர் விட்ட அனிதாவிடம், ‘சரி நீ என்ன சொல்ல வருகிறாய், அதை சொல் என ஆரி திரும்பத் திரும்ப கேட்டாலும் திரும்பத் திரும்ப அனிதா ‘என்னை பேச விட மாட்டேன் என்கிறீர்கள் என்று கூறிக்கொண்டு கடைசிவரை அவர் சொல்ல வந்ததை சொல்லவில்லை

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிது செய்யும் அனிதாவின் போக்கு வரவர பார்வையாளர்களுக்கு எரிச்சலை தந்து கொண்டிருப்பது கமெண்ட்டுகளில் இருந்து தெரிய வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.