close
Choose your channels

பிக்பாஸை கன்ஃப்யூஸ் செய்து சிரிக்க வைத்தவர்: அனிதா கேலி செய்வது யாரை?

Friday, December 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸையே கன்ஃப்யூஸ் செய்து அவரையே சிரிக்க வைத்தவர் இவர் ஒருவர்தான் என ரம்யாவை அனிதா கேலி செய்யும் இரண்டாவது புரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது 

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் கன்பெக்சன் அறைக்கு ஒவ்வொரு போட்டியாளராக அழைத்து இந்த 70 நாள்களில் நீங்கள் இந்த வீட்டில் பெற்ற அனுபவம் என்ன? பிக்பாஸ் வீட்டின் வெளியே நீங்கள் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்பது குறித்த கேள்வியை கேட்டார். ஷிவானி முதல் அர்ச்சனா வரை இந்த கன்பெக்சன் அறைக்கு வந்தவர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் உடைந்து கதறி அழுதார்கள் என்பதும் கண்ணீருடனே வெளியே சென்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் சற்றுமுன் கன்பெக்சன் அறைக்கு சென்ற ரம்யா உள்ளேயும் வெளியேயும் சிரித்தபடியே இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த பிக்பாஸ் வீட்டில் வாழ்க்கை எப்படி இருந்தது என்று கேட்டபோது ’எனக்கு யாரிடமாவது பிடிக்கவில்லை என்றால் நான் அவரிடத்தில் இருந்து விலகி கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்வேன் என்றும் அதே இடத்தில் இருக்க மாட்டேன் என்றும் ரம்யா கூறினார்.

அதனை அடுத்து ’எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அந்த நேரத்தில் அதை எல்லாம் பண்ணி கொண்டிருப்பேன் என்றும், இந்த வீட்டில் அழுகையில் உண்மை, பொய் என இரண்டும் பார்க்கலாம் என்றும் கூறினார்

இந்த நிலையில் திடீரென ’பிக்பாஸ் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்று கேட்க அதற்கு பிக்பாஸ், ‘நான் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள்’ என்று கூறுகிறார். இதனை அடுத்து கன்பெக்சன் அறையில் இருந்து சிரித்துக்கொண்டே ரம்யா வெளியே வரும் காட்சியும் அனிதா வரை பார்த்து ’பிக்பாஸையே கன்ஃப்யூஸ் செய்து அவரையே சிரிக்க வைத்தவர் ரம்யா பாண்டியன் என்று செய்தி வாசிப்பது போல கேலி செய்யும் காட்சியுடனும் இன்றைய 2-வது புரமோ முடிவுக்கு வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.