close
Choose your channels

அப்படி கேளு அனிதா, யாருகிட்ட கோர்த்து விட பாக்குற! நெட்டிசன்கள் பாராட்டு!

Thursday, December 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அனிதா பேசியபோது, ‘எல்லாரும் தனித்தனியா பேரை வச்சுட்டு, இப்ப அனிதா அந்த பேரயெல்லாம் சொல்லுவாங்கன்னு சொல்ரது எனக்கு கோர்த்து விட்ர மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது என்று கூறுகிறார். இதற்கு அனைவரும் அமைதியாக இருக்க, நிஷா, ரியோ மட்டும் பொங்கி எழுகின்றனர்.

பேர் வைக்க வேண்டும் என்ற ஐடியா நீங்கள் தான் கொடுத்தீர்கள் என்று அனிதா கூறுவதை ஏற்று கொள்ளாத நிஷா, பாஸ்ஸி, பப்பட் என்ற ஐடியாவை நானா கொடுத்தேன்? அந்த பேர் வேண்டாம் என்று அவன் தான் கூறினான் என்று ரியோவை கைகாட்டுகிறார் நிஷா. அப்படியென்றால் இந்த கான்செப்டே வேண்டாம் என்று நீங்கள் சொல்லி இருக்கலாம்ல, கான்செட்ப் வேண்டாம் என்று சொல்லியும் நீங்களும் சேர்ந்து ஏன் பெயர் வைக்கின்றீர்கள் என்று ஒரு கிடுக்கிபிடி கேள்வியை அனிதா கேட்க அதற்கு நிஷாவிடம் பதில் இல்லை.

இந்த நிலையில் இடையில் பாலாஜி குறுக்கிட வந்தபோது, அவரையும் நிஷா திட்டுகிறார். மொத்தத்தில் ஆரி சரியாக விளையாடவில்லை அவரது பாணி சரியில்லை என இன்று கூறும் ரியோ, நேற்றே உங்கள் பாணியை மாற்றி விளையாடுங்கள் அப்போதுதான் நமது அணி வெற்றி பெறும் என்று ஏன் கூறவில்லை. அர்ச்சனா அணிக்கு ஆதரவாக ரியோ, நிஷா கடந்த இரண்டு நாட்களாக விளையாடிவிட்டு தற்போது பொங்குவதில் என்ன நியாயம் என்பதே பார்வையாளர்கள், நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

மேலும் இந்த சண்டையை அர்ச்சனா வேடிக்கை பார்ப்பது குரூப்பிஸ தந்திரத்தின் மொத்த வடிவமாக உள்ளது. அன்பு குரூப்பை உடைக்காவிட்டால் அந்த குரூப்பின் ஆதிக்கம் அதிகமாகும் என்பதால் கமல்தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.