close
Choose your channels

மணிக்கூண்டு டாஸ்க்: வெற்றி பெற்ற அணி எது?

Thursday, November 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்ற நிலையில் போட்டியாளர்களில் ஒரு சிலர் தவிர இந்த டாஸ்க்கை அனைவரும் சீரியசாக விளையாடினார்கள். கடந்த வாரம் லக்சரி பட்ஜெட் ஜீரோ என்பதால் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டை பெற்றே வேண்டும் என்பதற்காக பல போட்டியாளர்கள் சின்சியராக விளையாடினார்கள்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் மணிக்கூண்டு டாஸ்க் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சனம் அணி இரண்டு மணி நேரம் 23 நிமிடங்கள் வித்தியாசமாகவும், பாலாஜி அணியினர் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் வித்தியாசமாகவும், கேபி அணியினர் ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் வித்தியாசமாகவும், ஷிவானி அணியினர் 56 நிமிடங்கள் வித்தியாசமாகவும், அர்ச்சனா அணியினர் 18 நிமிடங்கள் வித்தியாசமாகவும், விளையாட்டை முடித்து உள்ளனர்

எனவே ஷிவானி, ஆஜித், ரமேஷ் மற்றும் அர்ச்சனா, சம்யுக்தா, சோம் அணியினர் இந்த போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு அணிகளில் உள்ள ஆறு பேர்கள் அடுத்த வாரம் தலைவர் போட்டியில் பங்கு கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.