close
Choose your channels

பாரபட்சமானவர் அர்ச்சனா: பாலாஜியின் அழுத்தமான குற்றச்சாட்டு

Friday, October 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக நுழைந்து ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்த 15 பேர்களை முந்தி வருகிறார் அர்ச்சனா. ஆனால் அதே நேரத்தில் அனைத்து விஷயத்திலும் மூக்கை நுழைத்து, தான் சொல்லியதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஒரு நாட்டாமைத்தனம் அவருடைய ஒவ்வொரு செய்கையிலும் தெரிவதாக பார்வையாளர்கள் அவரை கவனித்து வருகின்றனர்

குறிப்பாக சுரேஷை அவர் வலுக்கட்டாயமாக சனம்ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்க வைத்தது கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. வீட்டின் தலைவர் போல் கிட்டத்தட்ட ஒரு மினி பிக்பாஸ் அர்ச்சனா செயல்பட்டு வருகிறார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாக உள்ளது

இந்த நிலையில் இன்று 1 முதல் 16 வரையிலான இடங்களில் போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் டாஸ்க்கில் அர்ச்சனாவுக்கு 11வது இடம் கிடைக்கிறது. அர்ச்சனாவின் 11-வது இடத்தை 6 பேர் ஆதரித்தனர். இந்நிலையில் அர்ச்சனா குறித்து கமெண்ட் அடித்த பாலாஜி ’அர்ச்சனா ஒருதலை பட்சமாக இருக்கின்றார். என்னுடைய கோபம் தூக்கி சாப்பிட்டுவிடும் என்று கூறும் அர்ச்சனா தான், ரியோவிடம் உன் கோபத்தை மாஸ்க் போட்டு மறைத்து கொள் என்று கூறினார். ஒருத்தருக்கு ஒருத்தர் கோபம் சரியில்லை, இன்னொருவருக்கு கோபம் சரி என்று எப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. அவருடைய செயல்கள் பாரபட்சமாக இருக்கிறது’ என்று பாலாஜி கூறுகிறார்

பாலாஜியின் இந்த கூற்றால் அர்ச்சனாவின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிகிறது போல் உள்ளது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.