நான் விளையாடலை, இனிமேல் நீங்க விளையாடுங்க ஆரி: பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் பந்துகளை பிடிப்பதில் இரு அணிகளுக்கும் பிரச்சனை, ரியோ-ஆரி இடையே பிரச்சனை என நீண்டு கொண்டே உள்ளது. அதேபோல் இதே டாஸ்க்கில் சோம் மற்றும் பாலா இடையேயும் பிரச்சனை நிகழ்கிறது. பாலா தள்ளி விடுவதாக சோம் குற்றஞ்சாட்ட, அதற்கு பாலா விளக்கம் அளித்து வந்தார்.

இந்த நிலையில் இந்த டாஸ்க் குறித்து ஒரே அணியில் இருக்கும் ஆரி, பாலாஜி தனிமையில் இதுகுறித்து ஆலோசனை செய்தபோது, ‘நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள், நான் முன்னாடி நின்று பந்து பிடிக்கின்றேன், நான் போனால் அது இடிக்குது இது இடிக்குதுன்னு கம்ப்ளெண்ட் பண்றாங்க’ என்று கூறுகிறார். அப்போது ஆரி, நானும் ரியோவும் அருகருகே நின்று கொண்டு இருக்கும்போது ரியோ ஒரு ஸ்டாட்டர்ஜியோடு விளையாடினார். முன்னாடி போ, முன்னாடி போ என்று கூறினார். அது என்னை டிஸ்டர்ப் பண்றதுக்கா அல்லது பேசி வச்சிட்டு பண்றாங்களான்னு தெரியலை’ என்று கூறுகிறார்

அப்போது பாலாஜி எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வந்தால் எதுக்கு விளையாடனும்’ என்று சலிப்போடு கூறுவதோடு இன்றைய இரண்டாம் புரமோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரிச்சந்திரன் என்று ஒருவரை ஒருவர் கூறி சண்டை போட்டு கொண்ட ஆரி, பாலாஜி இப்போது ஒரே அணியில் ஒற்றுமையாக உள்ளதை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு குழப்பமாகவே உள்ளது

More News

தாயின் கண்முன்னே மகளை கொன்ற அரக்கன்!

சென்னையில் மாமியார் கண்முன்னே மனைவியின் கழுத்தை கரகரவென அறுத்த கணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

மணமகன் தேடும் ப்ரியா பவானிசங்கர்! வைரலாகும் டுவீட்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தற்போது தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை பிரியா பவானிசங்கர்.

பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா பாசிடிவ்??? புதிய வகை கொரோனாவா???

பிரிட்டனில் கடந்த வாரம் முதல் புதிய வகை கொரோனா மாதிரி பரவி வருவதாகக் கூறப்பட்டது.

வகுப்பறையில் தாலி கட்டிய பள்ளி மாணவன்… வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!!!

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியான ஒரு வீடியோவில் ஒரு பள்ளி மாணவன் தன்னுடன் பயிலும் ஒரு மாணவிக்கு வகுப்பறையில் வைத்தே தாலிக் கட்டுகிறார்.

ஒரு சின்ன உதவியால் நடந்த பெரும் டிவிஸ்ட்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

பிரேசில் நாட்டில் பிச்சைக்காரனுக்கு முடித்திருத்தம் செய்ததால் அதுவே இறுதியில் பெரும் டிவிஸ்டாக மாறி இருக்கிறது.