ஜெயிலுக்கு போகும் பாலா-சுசி: ஒருமனதாக தேர்ந்தெடுத்த போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்க்கில் பாலா அணியினர் சரியாக விளையாடவில்லை என்பது ஏற்கனவே தெரிந்ததே. அவர்களது நேரம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் வித்தியாசம் இருந்தது

இதனை அடுத்து சற்று முன்னர் வெளியான முதல் புரமோவில் சரியாக விளையாடாத பாலாஜி அணியில் இருந்து இருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனை அடுத்து வழக்கம்போல் அர்ச்சனா தலைமையில் போட்டியாளர்கள் ஆலோசனை செய்து ஒருமனதாக பாலாஜி மற்றும் சுசியை தேர்வு செய்கின்றனர், ரம்யா ஓரளவுக்கு விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருந்ததால் அவரை தப்பிக்க வைத்தனர்

இதனை அடுத்து பாலாஜி மற்றும் சுசி பெயரை சக போட்டியாளர்கள் பிக்பாஸ் இடம் தெரிவித்ததை அடுத்து இருவரையும் ஜெயிலுக்கு அனுப்ப பிக்பாஸ் உத்தரவிட்டார். இதனை அடுத்து பாலாஜி மற்றும் சுசி சிறையில் அடைக்கப்பட்டனர்

இந்த நிலையில் பாலாஜி உடன் எப்போதும் ஒட்டிக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் ஷிவானி வருத்தப்பட, ’நீ ஏன் வருத்தப்படுகிறாய்? என்று பாலாஜி அவரை தேற்றுகிறார். இதனால் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வரும் வரை பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் காட்சிகள் இருக்காது என்றாலும் பாலாஜி-சுசியின் ரொமான்ஸ் காட்சிகள் சிறையில் இருக்க வாய்ப்பு உள்ளதாக பார்வையாளர்கள் கமென்ட் பகுதியில் தெரிவித்துள்ளனர்

More News

'வலிமை' படப்பிடிப்பின்போது அஜித்துக்கு விபத்தா?

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது என்பதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான்

பட்டாசு வெடிப்பது இந்து கலாச்சாரமே இல்ல… ஐபிஎஸ் அதிகாரியின் கருத்தால் வெடித்த சர்ச்சை!!!

தீபவாளி பண்டிகையின்போது கொரோனா பரவல், காற்று மாசுபாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து இருந்தன.

7.5% உள்இட ஒதுக்கீடு… முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் கனவு நனவான ஏழை மாணவர்கள் ஆனந்த கண்ணீர்!!!

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வினால் (நீட்) அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தமிழக அரசு

நான் என்றுமே உங்கள் விதைதான்: பிரபல இயக்குனருக்கு நன்றி கூறிய சூர்யா!

'சூரரைப்போற்று' படத்தில் சிறப்பாக நடித்த சூர்யாவுக்கு கடந்த சில நாட்களாக பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் சூர்யாவை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த்

கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்!!!

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா? எனக் கேலியாக ஒரு பழமொழி நம்ம ஊர் வழக்கத்தில் உண்டு.