close
Choose your channels

பாலாஜியின் திருட்டை கண்டுபிடித்த ரம்யா: சிக்கிய கேப்ரில்லா!

Wednesday, November 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் பாட்டி அர்ச்சனா வைத்திருக்கும் பத்திரத்தை திருட வேண்டும் என்பது சோம்-ரம்யாவுக்கு பிக்பாஸ் கொடுத்த வேலையை கச்சிதமாக இருவரும் செய்து முடித்தனர்.

ஒருபக்கம் பாலாஜி பத்திரத்தை திருட பிளான் போட, அந்த பிளானை கேபிரில்லா மூலம் தெரிந்து கொண்ட ரம்யா, ஆரி-சனம் சண்டையின்போது யாருக்கும் தெரியாமல் பாலாஜிக்கு முன்னரே பத்திரத்தை திருடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி அர்ச்சனா, குடும்பத்தினர் அனைவர் மீதும் சந்தேகப்பார்வையில் உள்ளார்.

இந்த நிலையில் இன்று ரம்யா திருடிய பத்திரத்தை பாலாஜி திருடி குப்பை தொட்டியில் மறைத்து வைக்கும்போது, அதனை ரம்யா பார்த்துவிட்டார். இதுகுறித்து பாலாஜியிடம் கேப்ரில்லா விசாரிக்க அதற்கு அவர் கேப்ரில்லாவிடம் ஆத்திரம் அடைகிறார். பத்திரத்தை பீரோவில் இருந்து எடுத்தது யார்? என ஆவேசமாக கேட்க, பீரோவில் இருந்து எடுத்த சோம்-ரம்யா குரூப் நமட்டு சிரிப்புடன் பாலாஜியின் சண்டையை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

மொத்தத்தில் மற்ற டாஸ்குகள் போலவே இந்த டாஸ்க்கிலும் பாலாஜியின் கோபத்தை அதிகரித்து மற்ற போட்டியாளர்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.