கால்சென்டர் டாஸ்க்கில் பெஸ்ட் யார்? முதலிடத்தை பிடிக்க போட்டா போட்டி!

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக கால்சென்டர் நடைபெற்று வந்தது என்பதும் இதில் காலர்கல், கால் சென்டர் ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த கால் சென்டர் டாஸ்க்கில் சில மென்மையான உரையாடல்களும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த டாஸ்க் முடிவடைந்த நிலையில் கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியவர்கள் யார் யார் என்பதை 1 முதல் 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என பிக்பாஸ் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தான் சிறப்பாக பேசியதாக வாக்குவாதம் செய்து வருகின்றனர். குறிப்பாக முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஆரி, அர்ச்சனா, சோம், ஆகியோர் போட்டா போட்டி போட்டு ஒருவருக்கொருவர் முந்தி கொண்டு முதலிடத்தை பிடிக்க முயற்சிப்பதால் போட்டியாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

மேலும் இரண்டாம் இடத்தை அனிதாவும், மூன்றாவது இடத்தை பாலாஜியும் பிடித்து கொண்டது போல் புரமோவில் தெரிய வந்தாலும், இந்த டாஸ்க்கில் முதலிடத்தை பிடித்தவர் யார்? கடைசி இடத்தைப் பிடித்தவர் யார் என்பதை இன்றைய நிகழ்ச்சிகள் பார்த்து தெரிந்து கொள்வோம்

More News

பா.ரஞ்சித்-ஆர்யா படம்: ஃபர்ஸ்ட்லுகே அசத்தல்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் குத்துச்சண்டை குறித்த கதையம்சம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில்

புரெவி புயல்… பாம்பனில் ஏற்றப்பட்ட 7 ஆம் எண் கூண்டு எச்சரிக்கை…தென்மாவட்டங்களின் நிலை???

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பன் பகுதிக்கு சுமார் 530 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

மீண்டும் உடைகிறது தயாரிப்பாளர் சங்கம்: புதிய சங்கத்தின் பெயர் அறிவிப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவு ஏற்கனவே நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என பிரிந்தது என்பதும் இதில் பாரதிராஜா தலைவராக இருக்கிறார் என்பதும் தெரிந்ததே

திருமண மண்டபத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மாப்பிள்ளை: மணமகள் ஆச்சரியம்

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு மாப்பிள்ளையும் அவரது வீட்டார்களும் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சினிமாவுக்கு வருகிறாரா சின்ன கேப்டன் விஜயபிரபாகரன்?

கேப்டன் விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் 'சகாப்தம்' மற்றும் 'மதுரைவீரன்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் தற்போது அவர் 'மித்திரன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்