எப்படி தாங்குவாய் மகளே! லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ் தந்தை!

  • IndiaGlitz, [Monday,November 16 2020]

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் என்பவர் திடீரென நேற்று காலமானதாக வெளிவந்த தகவல் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து லாஸ்லியாவே தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லாஸ்லியாவுக்கு ரசிகர்களும் பிக்பாஸ் போட்டியாளர்களும் சமூக வலைதளங்கள் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அவருக்கு தந்தை போல் இருந்த இருந்த போட்டியாளர்களில் ஒருவர் சேரன். இவர் லாஸ்லியாவின் பிக்பாஸ் தந்தை என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சேரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறும் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’லாஸ்லியா... தந்தை மேல் எத்தனை அன்பும் கனவும் வைத்திருந்தாய் என்பது எனக்கு நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படி தாங்குவாய் மகளே... சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சேரனை, சேரப்பா என அன்புடன் அழைத்து வந்த லாஸ்லியாவுக்கு இந்த டுவீட் ஒரளவுக்கு ஆறுதலாக இருக்கும் என கருதப்படுகிறது.