close
Choose your channels

பாலாவை நிறைய தடவை ட்ரை பண்ணியிருக்கேன்: 'கூடிப்பிரியேல்'க்கு க்யூட் விளக்கம் தந்த கேபி!

Thursday, January 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த சுற்றில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு வாக்கியம் கொடுக்கப்பட்டு அந்த வாக்கியம் யாருக்கு சரியாக பொருந்துகிறது என்பதை கூறும்படி பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் வாக்கியம் டாஸ்க்கை முடித்துவிட்ட நிலையில் கடைசியாக வருகிறார் கேபி. அவருக்கு ’கூடிப் பிரியேல்’ என்ற வார்த்தை வருகிறது இந்த வார்த்தையை வைத்து கேபி கூறிய போது ’எனக்கும் பாலாவுக்கும் நல்ல பாண்ட் இருந்தது. அதே போல் எனக்கும் ஷிவானிக்கும் நல்ல பாண்ட் இருந்தது. இரண்டு பேரிடமும் ஒரே நேரத்தில் தனித்தனியாக நெருக்கமாக இருந்தேன். ஆனால் அவங்க ரெண்டு பேருடனும் பிரேக் ஆன பிறகு அவங்க ரெண்டு பேரும் குளோஸ் ஆகிவிட்டனர், நான் தனியாக இருப்பது போலவும் இருந்தது.

நான் ரெண்டு பேரிடமும் மீண்டும் நெருக்கமாக ட்ரை பண்ணினேன் என்றும் ஆனால் அது நடை பெறவில்லை. பாலாவிடம் தினசரி இரவு நான் கேட்பேன், உனக்கு என்னடா பிரச்சனை என்று? ஆனால் பாலா பதில் சொல்லவில்லை. அதேபோல் நிறைய தடவை ஷிவானியிடமும் கேட்டிருக்கிறேன். அவளும் எதுவும் சொல்லவில்லை என்று கேபி ‘கூடிப்பிரியேல்’ வார்த்தைக்க்கு ஒரு க்யூட் விளக்கத்தை கொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.