close
Choose your channels

அடுத்த வார பிக்பாஸ் கேப்டன் இவர்தான்: ஷிவானிக்கு பிரச்சனை வருமா?

Friday, November 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் கேப்டன் யார் என்பதை முடிவு செய்ய ஆஜித், கேப்ரில்லா மற்றும் நிஷா ஆகிய மூவரும் நாமினேட் செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் மூவருக்கும் பிக்பாஸ் ஒரு போட்டி வைக்கிறார். அந்த போட்டியில் வெற்றி பெரும் நபரே கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தலையில் வைக்கப்பட்டுள்ள ஹெல்மெட் மூலம் பலூன்களை உடைத்து அதில் இருந்து கீழே விழும் நாணயங்களை சேகரிக்க வேண்டும் என்பதுதான் கேப்டன் பதவிக்கான டாஸ்க்.

நிஷா வழக்கம்போல் திணறி வரும் நிலையில் ஆஜித் ஓரளவு முயற்சித்தாலும் அவரால் அதிக பலூன்களை உடைக்க முடியவில்லை. ஆனால் கேப்ரில்லா சுறுசுறுப்பாக செயல்பட்டு 27 பலூன்களை உடைத்து அதிலிருந்து 27 நாணயங்களை சேகரித்துள்ளார். இதனால் கேப்ரில்லா தான் அடுத்த வாரம் கேப்டன் என அறிவிக்கப்படுகிறது.

இந்த வாரத்தில் பாலாஜி மற்றும் கேப்ரில்லா இடையே பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஷிவானி குறுக்கே வந்ததால் ஷிவானிக்கும் கேப்ரில்லாவுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது கேப்ரில்லா கேப்டனாகியுள்ளதால் ஷிவானிக்கு பிரச்சினை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.